- Wednesday
- May 13th, 2026
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப்...
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று 8 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, தபால்மூல கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஐந்தாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பு அற்ற...
வடமாகாண சபை இளைஞர் யுவதிகளிற்கான வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.எந்த ஒரு தொழில்சாலைகளும் உருவாக்கப்படவில்லை வடக்கை நோக்கி வந்த தொழில்சாலைகளையும் என்ன காரணங்களை காட்டி திருப்ப முடியுமோ அவ்வாறான காரணங்களை காட்டி திருப்பியதுதான் மாகாண சபையின் சாதனை. என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்....
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கெப்பற்றிக்கொலவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண், குழந்தை பிறந்து ஒருகிழமை கடந்த நிலையில், பன்றிக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாகி, கடந்த பெப்ரவரி மாதம்...
30கிலோகிராம் கஞ்சா கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். தொண்டமனாறு வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த 61 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 30கிலோகிராம் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேற்படி நபர், சாவகச்சேரி...
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை எந்தவொரு அதிகாரிகளும் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடாத நிலையில் ஈழதமிழர்கள் நான்காவது நாளாகவும் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில்...
நெடுந்தீவு மற்றும் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை கைதுசெய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து இரண்டு றோலர் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறினர்.
வேலணை பகுதியில் உள்ள கடைக்குச் சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அலைபேசி மீள் நிரப்பு அட்டையினை வாங்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்ததாகக்கூறி மிகுதி பணத்தினை தருமாறு வர்த்தகரை அச்சுறுத்திய இருவர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வேலணை பகுதியில் உள்ள கடைக்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆயிரம்...
அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள் சதோச களஞ்சியசாலைகளில் தேவையான அளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி நகர மற்றும் சன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை...
பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேருக்கும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி நீதவான் முன்னிலையில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட வேளையே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 20ம் திகதி குறித்த 15 மாணவர்களும் பேராதனை பொலிஸாரால் கைதுசெய்யபட்டனர். பின்னர் அவர்களை இன்று வரை (2ம் திகதி) விளக்கமறியலில்...
ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூஸைனுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுவார்ததை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் கடந்த 27ஆம் திகதி...
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கொழும்பு கல்கிசை நீதிமன்றில் இருந்து சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி இரண்டும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக, சுமார் மூன்று மணிநேரம்...
பட்டப்படிப்பை நிறைவு செய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு பேராட்டம் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள்...
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆகசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை முல்லைத்தீவு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களில் ஒருவர் தனக்கு தெரிந்த பல்கலைகழகம் சாராத வேறு சிலரை தமக்கு சார்பாக அழைத்துவந்துள்ளார். இதன்படி நேற்றையதினம் மாலை குறித்த பல்கலைகழக மாணவன் மது...
சிறீலங்காவின் 45ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாத் டெப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் 44ஆவது பிரதம நீதியரசரான கே.ஸ்ரீபவன் ஓய்வுபெற்றதையடுத்து, அரசியலமைப்பு சபையால் ஏகமனதான பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டார். புதிய பிரதம நீதியரசருக்கு ஜனாததிபதி மைத்திரிபால சிறிசேன...
மாலபே தனியார் வைத்திய கல்வி நிறுவனத்தினை அரசுடைமையாக்குமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி, வடமாகாண வைத்தியர்கள், 1 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். எனினும், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறுகின்றன.
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 16 ஆயிரத்து 500 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள். இதே வேளை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சுகாதார அமைச்சு 500 உதவியாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்குரிய நியமனக் கடிதங்களை அமைச்சர் டொக்டர்...
Loading posts...
All posts loaded
No more posts
