வாகனங்களை நிறுத்தி வைப்போருக்கு விஷேட அறிவிப்பு

பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் முன்பக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையிலும் வாகன உரிமையாளர்களின் கையடக்க தொலைப்பேசி இலக்கத்தை தெளிவாக காட்சிப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களின் காரணமாக இதுவரையில் தற்பொழுது நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் இவ்வாறு காட்சிப்படுத்துமாறும்...

தபாலில் சேர்ப்பதற்காக பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா – தபால் மா அதிபர் அறிவிப்பு

தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட அதிகாரிக்கு அல்லது அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவர் முன்னிலையில் பொதியிட்டு ஒப்படைக்கப்படும் பொதிகளை மாத்திரம் தபால் அலுவலகங்கள் பொறுப்பேற்குமாறு அனைத்து தபால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்மா அதிபர் ரஞ்சித்...
Ad Widget

தாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பினர், குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 7 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது – மாவை

அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாடே இந்த குண்டுத் தாக்குதல்கள் எனவும் அதற்கு தனது கண்டனத்தினையும் அவர் தெரிவித்தார். இந்திய உளவுத்துறை தகவல்களை வழங்கியபோதும் அவற்றினை கவனத்திற்கொள்ளாமல் இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்...

இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்புக்கள்- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359ஆக அதிகரிப்பு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்களிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் தினமான கடந்த...

‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வெடிபொருள்களுடனான வாகனங்கள் நடமாட்டம்

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால் உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,...

பாடசாலைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்!

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகிதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக...

அடையாளம் காணப்படாத நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டவர்களின் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள்!!

நாட்டில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின், பெரும் எண்ணிகையிலான சடலங்கள் கொழும்பு தலைமை நீதி வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இந்த அலுவலகங்களுக்கு சென்று சடலங்களை அடையாளம் காணமுடியும் என்று கொழும்பு தலைமை நீதிமன்ற வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்....

யாழில் பதற்றம்! வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை!

யாழ்.ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். தேடுதலின் தொடர்ச்சியாக அங்கு பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டும் வீதி தடை போடப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அமர்ந்துள்ளார்....

தற்கொலைக்குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது!

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய தற்கொலைக்குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தான் தன் மதத்திற்காக இந்த தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறியுள்ளார். இயேசுபிரானின்...

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல்

இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக n சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருக்கிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அதில்...

வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு!

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்சதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து...

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இராணுவனத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டுள்ளனர். அத்தோடு தேவாலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொது மக்கள் கூட்டமாக ஒன்று கூடி நிகழ்வுகளை நடாத்த வேண்டாம்...

அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி வௌியிடப்பட்டது

நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த...

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய,...

குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி! ஊழியர்களுக்கும் அழைப்பு!!

கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்.பல்கலை வளாகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். இதே வேளை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக...

புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் வெடிமருந்துகள் மீட்பு!

கொழும்பு புறக்கோட்டை பஸ்தியான் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெட்டோனேற்றர் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்றது. மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் குறைந்தளவு அமுக்கத்தையுடைய இந்த வெடிமருந்துகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துக்காக பேருந்து நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் கூறினர்.

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுலில்!!

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகள் மாத்திரம், இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை தேசிய துக்க தினம்!!

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று காலை கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்களை அடுத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக பயண பொதியுடன் நடமாடிய நபர்!! பொலிஸார் விசாரணை!!

நாட்டில் நேற்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவர் விசாரணைக்கு உள்படுத்தி விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரில் இரண்டு அடையாள அட்டைகளுடன் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவரை சிறப்பு அதிரடிப் படையினர் இன்று காலை விசாரணை செய்தனர். திருகோணமலையைச் சேர்ந்த சந்தேகநபர் இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதமாற்றமாகியுள்ளார். அவர்...
Loading posts...

All posts loaded

No more posts