- Tuesday
- May 5th, 2026
யாழில் சுகாதார விதிமுறைகளை காவல்துறையினர் தாம் பேண தவறியதாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானது எனவும் , அவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை எனவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் செயலாளர் உட்பட 11 பேரை தனிமைப்படுத்த வேண்டும் என கடந்த ஞாயிறுக்கிழமை யாழ்ப்பாண காவல்துறையினர் யாழ்.நீதவானிடம்...
பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார். நான்கு நாள்கள் ஆகிய...
புதிய காணொலித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை செயல்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான முதல் படியாக புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை இடையே முதல் விசாரணை திட்டம் நேற்றையதினம் தொடங்கியது. அதன்படி, இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக நேரலைக் காணொலி உரையாடல் (Video Conference) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக சிறப்பு...
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விரைவில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்...
யாழ்ப்பாணம் காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடலில் எரிகாயம் ஏற்பட்டநிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாபோதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. சிறிலங்கா ரெலிக்கொம்மின் பகுதியளவாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் சீரா நிறுவனத்தினர் வீதியோரமாக கம்பங்களை நடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி இன்று காலை...
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று(புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் எண்ணக்கருவுக்கு அமைய இராணுவ வீரர்களின் நிதிப் பங்களிப்பில் குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது. கணவன் விபத்தில் உயிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன்...
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக...
கொரோனா வைரஸை தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என திருகோணாமலை – நிலாவெளியில் அமைந்துள்ள கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மஹாதேவன் நிரஞ்சன் தெரிவித்தார். உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் இலங்கைக் கிளையினால்...
ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும் வரலாறு அதன் பக்கங்களில் பதிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இன்றளவிலும் சினிமாத்துறையை தொழில் மயப்படுத்த முடியாமல்...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர் எஸ்.மோகனகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் டெங்கு நோய் தொடர்பாகவும்...
ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி...
நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த உளவுத்துறை பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் 569 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி, முடமாவடிப் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் முதலை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பகுதியில் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய போதும் காலை 6 மணியளவிலேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். இந் நிலையில் குறித்த இடத்திலிருந்து முதலை இராமலிங்கம் வீதியில்...
யாழ், செம்மணிப்பகுதியில் ஏ9 வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செம்மணிப்பகுதியில் இன்று (19) காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏ9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரியில் புகைப்பரிசோதனை...
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை...
இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு,...
யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 98 பேர் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத் தோட்டத்தில் கோரோனா தொற்று பரவல் ஏற்பட்டதால் அந்த இடத்தைச் சேர்ந்த 98 பேர் கடந்த மாதம் 22ஆம் திகதி பலாலி விமான படை முகாமின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில்...
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட வேண்டும் என சிங்கள பேரினவாத சக்திகளும் சில தமிழ் அரசியல் சக்திகளும் பலமாக செயற்பட்டு வருகின்றன என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
வடக்கில் அவசியமற்று கூட்டம் கூடுவதை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தெள்ளது. நேற்றயதினம் மாலை இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த பல்வேறு கெடுபிடிகள் பொலிஸார் மற்றும் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோவிட் – 19 நோய்த்...
Loading posts...
All posts loaded
No more posts
