13 வருடங்களின் பின்னர் கட்டணங்கள் மறுசீரமைப்பு!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் சாரதி அனும‌தி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்....

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது என அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்....
Ad Widget

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்மற்றும் மாணவர்கள் தற்கொலை முயற்சி!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க தவறான முடிவெடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தின் துறையொன்றின் தலைவராக இருந்த பேராசிரியர் தனது மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்த நிலையில் துறைத்தலைவராக...

வீட்டில் இருந்தே கடலுணவுகளை பெற்றுக் கொள்ளவதற்கான வசதி!

பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன்விற்பனை நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில் PICME ஊடாக இலங்கை கடற்றொழில்...

தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு! ஓரிரு நாட்களில் 10 இக்கும் ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள்!!

பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பாலகுமார் எனும் 44 வயதுடைய நபரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...

சீன ஆய்வுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீன இராணுவத்தின் ஆய்வுக்கப்பலான யுவான் வாங் 5 (Yuan Wang 5) இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. செய்மதிகளைக் கண்காணிக்கக்கூடிய இக்கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வரவிருந்தது. எனினும் இதன் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது. ‘ யுவான் வாங் 5’ கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!!

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். இதன்படி, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில்...

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும். இதனால் விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய...

யாழில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட பரபரப்பு!! நான்கு பேர் கைது!!

காங்கேசன்துறையில் இருந்து காலி நோக்கி பயணித்த மஹவ ரயிலில் மோதலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கசந்துறையிலிருந்து காலி நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிய மூவர், ரயில் இருக்கை தொடர்பில் நபருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் குடிபோதையில் ரயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ​​ரயிலில் இருந்த மற்றொரு நபர் அவர்களை...

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணம் 67 மில்லியன் ரூபா!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக...

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் திறைசேரி செயலாளரால் குறிப்பிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் விதிகளின்படி அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,...

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா!

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் மேதகு அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை...

நல்லூரில் தங்கச் சங்கிலி அபகரித்த பெண் கைது!!

நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 லட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிலையில்...

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு: நாடு முழுவதும் சோதனை !

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு தற்போது திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

இன்று (15) திங்கட்கிழமை 01 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தீர்வை வழங்குவதாக வாக்கெடுப்பிற்கு முன்னர் ரணில் உறுதியளித்தார் என்கின்றார் விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணியை திரும்பப் பெறுவதற்கும் அவர் இணங்கியதாகவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி...

மின்சாரக் கட்டண உயர்வினால் 50000 கோடி வருமானம்!!

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருமானம் மாதாந்தம் 50000 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது இலங்கை மின்சார சபை மாதாந்தம் 60000 கோடி ரூபா வரையில் நட்டமடைந்து வருகின்றது. தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட காரணிகளினால் ஆண்டு தோறும் மின்சார சபை...

இனி Full Tank எரிபொருள் வழங்க தீர்மானம்!!

பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக (Full Tank) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. மேலும், இந்த தீர்மானத்தின் மூலம் பல நாட்கள்...

யாழ்ப்பாண நகரத்தில் பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ளலாம்! -யாழ் வணிகர்கழகம்

கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அதில் முரண்பாடுகள் காணப்படுகின்றதென யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார். யாழ் வணிகர் கழகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புறக்கோட்டை சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டதாக...

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : அரசாங்கம்

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts