வலி.தென்மேற்கு தவிசாளரின் கோரிக்கையை அடுத்து பிரதேசசபைக் கட்டடம் பொலிஸ் பாதுகாப்பில்

வலி தென்மேற்கு பிரதேச சபையின் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியாக பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசனால் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. (more…)

வடக்கு கிழக்கில் இராணுவ வீடமைப்புக்கு சீனா 100 மில். டொலர்

வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவத்தினருக்கு வீடமைப்பதற்கு என சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கென இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை போரால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய வருகிறது. (more…)
Ad Widget

யாழிலிருந்து படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 58 பேர் கைது

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியிலிருந்து  சட்டவிரோதமாக படகுமூலம்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 58 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் இரு மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்தபின் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  இவர்கள் கடற்படையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வட பகுதிக்கு அதிக வெளிநாட்டவர்கள் செல்கின்றனர்!- கோத்தபாய

இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரையில் இலங்கையின் வடபகுதிக்கு 31,500 வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் பயணம் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2011 ம் ஆண்டில் இருந்து 51.400 பேர் வடக்குக்கு பயணம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 100 நாடுகளின் பயணிகள் இதில் அடங்குகின்றனர். (more…)

விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்: யாழ்.கொட்டடிப் பகுதியில் சம்பவம்

யாழ்.கொட்டடிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப்படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி யமுனாநந்தாவின் வாகன விபத்து!

யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரிவைத்தியக் கலாநிதி யமுனாநந்தா பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.நேற்று வைத்தியர் தனது வாகனம் பழுதடைந்த நிலையில் பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் மற்றொரு வாகனத்தில் பயணித்துள்ளார்.இந்நிலையில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அந்த வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது. (more…)

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா, சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்....

மக்களது செயற்பாடுகள் எம்மால் பாதிக்கப்படக் கூடாது இன்று முதல் அலுவலக செயற்பாடுகள் ஆரம்பம்; உடுவில் பிரதேச சபை தவிசாளர்

வலி தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடத்தில் இன்று அலுவலக செயற்பாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று திறக்கவிருந்த நிலையில் அதிகாலை குறிப்பிட்ட புதிய கட்டிடத்திற்கு; இனம் தெரியாத நபர்களினால் கழிவு ஒயில் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டது. எனினும் திட்டமிட்ட படி குறிக்கப்பட்ட நேரத்தில் ஊழியாகள் ,தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இனைந்து கட்டடத்தை...

நாட்டின் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மூடப்படும்; கல்வி அமைச்சர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி இன்று முதல் மூடப்படுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. யூலை 4ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பினை மேற் கொண்டு வருகின்றனர். கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்களை கட்டுப்படுத்துவதும்...

விரிவுரைகளை ஆரம்பியுங்கள் – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறுபட்ட பணிப் புறக்கணிப்பால் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

முத்திரைச்சந்தி கிட்டுப்பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் உன்னிக்கிருஷ்ணன்

சங்கிலியன் தோப்பு கிட்டு பூங்காவில் நேற்று (18.08.2012) மாலை 6.30 மணிக்கு “தெய்வீக சுக அனுபவம்” என்ற தொனிப்பொருளில் அமைந்த இசை நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் முன் இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரபல கர்நாடக இசைப்பாடகர்களான ஸ்ரீ உன்னி கிருஸ்ணன், ரி.எம். கிருஸ்ணா ஆகியோருக்கும் ஏனைய அணிசெய் கலைஞர்களுக்கும்...

குற்றச் செயல் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது! யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாரின் அர்ப்பணித்த செயற்பாடுகள் காரணமாக ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணம் குற்றச் செயல்கள் குறைந்த மாவட்டமாக திகழ்வதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். (more…)

9 கிராம அலுவலர் பிரிவுகள் வலி.வடக்கில் பறிபோகும் ?

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 9 கிராம அலுவலர் பிரிவுகளை இராணுவத்தினர் நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்போகின்றனர் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது. இந்த 9 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிகின்றது.இந்தப் பிரச்சினை தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் நிரந்தரமாக...

கர்நாடக இசைக் கல்லூரியை யாழில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்: உன்னிகிருஷ்ணன்

யாழ்ப்பாணத்த்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் சங்கீதத்தை வளர்ப்பதற்கு பயிற்சி நிலையம் ஒன்று அமைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக கர்நாடக சங்கீத வித்துவானும் பிரபல திரைப்பட பின்னணி பாடகருமான பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....

யாழ் மட்டுவில் பகுதியில் வீதி விபத்து தலை நசுங்கி பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையால் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர்  தலை நசுங்கி பலியாகியுள்ள   சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நாதஸ்வரவித்துவான் பாலமுருகன் நல்லூர் பெருந்திருவிழாவில் வாசிக்கமறுப்பு?

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரவித்துவான் பாலமுருகன் நல்லூர் பெருந்திருவிழாவில் வாசிக்கமறுப்புத்தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வருடாவருடம் நடைபெறும் பெருந்திருவிழாவில் வழமையாக வாசிக்கும் ஏகபோக உரிமையானது வித்துவான் பத்மநாதன் மறைவின்பின் பாலமுருகன் குழுவினருக்கு கிடைத்திருந்தது (more…)

புலிச்சின்னத்தை உடம்பில் பச்சை குத்தியிருந்த புலம்பெயர் தமிழர் விடுதலை

பிரான்ஸிலிருந்து யாழ் வந்திருந்த புலம்பெயர் இளைஞர் ஒருவர் புலி உருவத்தை பச்சை குத்தியிருந்ததால் பொலிஸாரால் கைதான சம்பவம் நேற்று இடம்பெற்றது.அவ்விளைஞர் யாழ். நீதவான் மா. கணேசராசா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும், அவருக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்காத நிலையில் அவ்விளைஞரை நீதவான் விடுதலை செய்தார். (more…)

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில் இலங்கை விஞ்ஞானியின் பங்களிப்பு

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது. (more…)

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளன: அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியாவதும் தொடர்பாக பத்திரிகையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. (more…)

தமிழ் அரசியல் கைதியின் கொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.முன்னணி அழைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதியின் கொலைக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை எதிர்வரும் 15ம் திகதி யாழில் நடத்தவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.15ம் திகதி காலை 11 மணி தொடக்கம், 12.30மணிவரையில் குறித்த போராட்டம் யாழ்.நகரிலுள்ள பேரூந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts