- Sunday
- August 3rd, 2025

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை ( 28.11.2012 ) படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (more…)

வடமாகாணத்திலேயே கூடுதலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றன என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். (more…)

தொற்றுநோய் அல்லாத நோய்களினால் இறப்புக்கள் அதிகரிப்பதாக புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார்.மருத்துவ சங்கத்தின் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)

மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது. (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.புலனாய்வுப்பிரிவினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தில், ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலுள்ள காரியாலயம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல், உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், மற்றும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பன வடக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. (more…)

யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. (more…)

பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் மூன்றாவது கிளை அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என அதன் பிராந்திய இணைப்பாளர் ஸ் ரீபன் ரோமன் தெரிவித்தார். (more…)

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சாராயப் போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. வைத்தியசாலை ஆண்கள் விடுதியில் உள்ள நோயாளர் ஒருவரைப் பார்வையிடச் சென்றவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பாதுகாப்புச் சேவை உத்தியோகத்தர் அதுகுறித்து வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டனர். (more…)

பட்டதாரிப் பயிலுநர் ஆசிரியர்களாக நியமனம் வழங்கப்பட்ட 2,500 பேருக்கு ஆசிரிய சேவையில் நிரந்தர நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த, தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்ற வேண்டியுள்ளதால், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும் புதிய மின்மாற்றி நிறுவுவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். மாவட்ட மின்பொறியியலாளர் தெரிவித்தார். (more…)

யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி தெரிவித்தார். (more…)

தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts