ஜெனிவா தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது. (more…)

அனுமதியின்றி நடாத்தும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும்: யாழ். மேயர்

யாழ். மாநகரசபை எல்லைக்குள் மாநகர சபையின் உரிய அனுமதிபெறாமல் இயங்கிவரும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டுமென்றும், மீறி நடாத்தப்படும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' (more…)
Ad Widget

ஒருநாளான சிசு மரணம்!- விசாரணை செய்யக்கோரி பெற்ற தாய் கதறல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருநாளான சிசு திடீரென மரணமாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் தெரிவித்துள்ளார். (more…)

சட்டவிரோத மின் பாவனையாளர்களிடம் பணம் வசூல்

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 121 பேருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின்போது 5,432,511.78 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மின்சார சபையின் பொறியியலாளர் சங்கரப்பிள்ளை ஞானகணேசன் இன்று தெரிவித்தார். (more…)

ஆளுனர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வருடந்தோறும் வழங்கப்படும் வடமாகாண ஆளுனர் விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. (more…)

யாழில் காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

யாழில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிமாக பொருட்களை விற்பனை அதிகரித்து வருகின்றது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று தெரிவத்தார். (more…)

மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

இந்திய கடற் பரப்பிற்குள் திசைமாறிச் சென்ற இரு மீனவர்கள் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்தார். (more…)

வட மாகாண சபை தேர்தலில் இலாபம் தேட அரசாங்கம் முயற்சி: சிறிதரன் எம்.பி

வட மாகாண சபை தேர்தலை நடத்தாது இலாபம் தேடும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபர் மரணம்

முன்விரோதம் காரணமாக வாள்வெட்டுக்கும் அசிட் வீச்சுக்கும் இலக்கான வயோதிபர் உயிரிழந்துள்ளார்.நாவாந்துறை ஒஸ்மானிய கல்லூரி வீதியைச் சேர்ந்த 53 வயதான அப்துல் காதர் முஹம்மது அலிம் நிஹார் என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (more…)

வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்யும்!- காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை

இலங்கையில் அதிக இடியுடன் கூடிய மழைபெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் அதிக அளவில் மழை பெய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. (more…)

சீன உதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். நூலக உசாத்துணைபிரிவு கையளிப்பு

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் கையளித்துள்ளனர். (more…)

வைத்தீஸ்வரா கல்லூரி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

பிரிட்டனின் தெற்காசிய விவகார அதிகாரியுடனான மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியுடனான யாழ். மாவட்ட செயலாளரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)

கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது: மு.சந்திரகுமார்

யாழ். மாவட்டத்தில் நகர்புறக் கல்வி நிலைமையோடு ஒப்பிடுகையில் கிராமப்புறங்களின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார். (more…)

எஸ் எல் பி சி வழியான பி பி சி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்

பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது. (more…)

இது தேசத்துக்கு மகுடமல்ல, இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு: அரியநேத்திரன்

அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு அல்ல, அது தமிழர்களை இனப்படுகொலை செய்த இராணுவத்திற்கு மகுடம் சூட்டும் நிகழ்வு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (more…)

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட கிளை அங்குரார்ப்பணம்

வடமாகாண ஊடகவியலாளருக்கான பாதுகாப்பு, கண்ணியத்துவம், நலன்பேணல் தொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய தீர்மானத்துடனும், அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதை அரசு உடன் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)

குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தில் வாழும் 160 குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்து தருமாறும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரிக்கை விடுத்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். (more…)

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர்கள் இருவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் யாழ். மேல் நீதிமன்றினால் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல: ஆனந்த சங்கரி

'தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. ஏனெனில் கூட்டமைப்பினர் வட மாகாணத்தில் 63 ஆயிரம் வாக்குகள் பெற்றபோது சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். அவ்வாறு இருக்கையில் த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளா?' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி...
Loading posts...

All posts loaded

No more posts