யாழ். இளைஞர் அணி கலைக்கப்படவில்லை; தமிழரசுக் கட்சியின் செயலர் மாவை சேனாதிராசா தெரிவிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட இளைஞர் அணியை கலைத்து விட்டதாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளபோதும், (more…)

போர் வெற்றி விழா முத்திரையை யாழில் மாகாணசபை ஊழியா்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை

"தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் (more…)
Ad Widget

யாழ் புல்லுக்குளம் குறித்து தனியார் இணையத்தளத்தில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது- ஆளுநா் ஜிஏ சந்திரசிறி

யாழ் மாநகர எல்லைக்குள் மாநகர அழகை மேம்படுத்தும் நோக்கில் புனரமைக்கப்பட்ட புல்லுக்குளம் குறித்து 21.05.2013 அன்று புதிய யாழ்ப்பாணம் எனும் இணையத்தளத்தில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என்று வட மாகாண ஆளுநா் ஜிஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

வடக்கில் நேற்று அரச ஊழியர்கள் எவரும் லீவு பெற தடை!- ஆளுநா் சந்திரசிறி கடுமையான உத்தரவு

வடக்கில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க ஆளுநர் சந்திரசிறி கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். (more…)

யாழ்ப்பாண இராணுவத் தளங்கள் பலாலிக்கு மாற்றப்படவுள்ளன

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

மின் கட்டண உயர்வைக் கண்டித்து பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்களின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்பாட்டத்திற்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)

யாழில் செபக்கூடமாக மாறிய யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி

யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. (more…)

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி: அசோக் கே. காந்தா

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். (more…)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலிகளின் செயற்பாட்டாளர் இந்தியாவில் கைது!

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளராக இருந்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை இந்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். (more…)

வடக்கில் பெரும் படைக் குறைப்பு; இராணுவத் தளபதி

வடக்கில் நாம் பெரும் படைக்குறைப்பை மேற்கொண்டுள்ளோம் போர்க்காலத்தில் யாழ். மாவட்டத்தில் 16 இராணுவ முகாம்கள் இருந்தன. தற்போது 3 இராணுவ முகாம்கள் மாத்திரமே அங்குள்ளன (more…)

சுன்னாகம் மின்சார நிலைய பகுதியில் கழிவு நீர்; அதிகாரிகள் பாராமுகம் என்கின்றனர் மக்கள்

சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியின் பின்புறத்தில் கழிவு நீர் தேங்குவதனால் அயலில் உள்ள தாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (more…)

கொரியன் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு

கொரியன் வேலைவாய்ப்பு திட்ட விழிப்புணர்வு செயல்திட்டம் தொடர்பான கருத்தரங்கு நாளை புதன்கிழமை யாழ். காங்கேசன்துறை வீதி, பலநோக்கக் கூட்டுறவுச்சங்க தலைமைக் கட்டிடத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. (more…)

த.தே.ம.மு முக்கியஸ்தர்களிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஆகியோரிடம் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (more…)

வலிகாமம் வடக்கு மக்களின் வழக்கு விசாரணைக்கு வருகிறது

வலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ் விபத்து: 24 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். (more…)

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பலபாகங்களிலும் கடும் மழை பெய்யக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. (more…)

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள், இன முரண்பாட்டை ஏற்படுத்தும்: டக்ளஸ் தேவானந்தா

மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

குடாநாட்டில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்

யாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர். (more…)

புத்தூரில் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி

வலிகாமம் கிழக்கு புத்தூர் சரஸ்வதி சனசமூக நிலையமும், அன்னமார் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து நடாத்திய மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப்போட்டி சரஸ்வதி சனசமூக நிலையத் தலைவர் தவநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. (more…)

குடாநாட்டில் டெங்கின் தாக்கம், இதுவரையில் 319 பேர் சிகிச்சை

குடாநாட்டில் இந்த வருடத்தில் நேற்றுவரை டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகிய 319 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அவ்வைத்திய சாலையின் புள்ளிவிபரமொன்று தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts