Ad Widget

விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர்: நகர சபை தலைவர்

meeting_jaffna_police_jeffreeyயாழ் மாவட்டத்தில் விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர் என சாவகச்சேரி நகர சபை தலைவர் தேவசகாயம் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பதிவு செய்யப்பாட விடுதிகள் மற்றும் சமூகர் சீர்கேடான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும்போதே இதனை அவர் சுட்டிக்காட்டினார்.

“அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் ஆணும் விடுதிகளில் தங்குவது தடையில்லை என்று பொலிஸ் தரப்பினால் தொவிக்கப்பட்டது. பொலிஸாரின் அந்த கருத்து யாழ் மாவட்டத்தில 18 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்காதது விபச்சாரத்தை ஊக்கப்படுத்தும் ஆலோசனையாகவே இது அமையும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த யாழ் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி,

“யாழ் மாவட்டத்தில் 40க்கு மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட இருவர் தங்கள் சுயவிருப்பின் பேரில் தங்கியிருந்தால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கமுடியாது. அவர்களின் சுயமரியாதையினையும் கருத்தில் எடுக்க வேண்டும் இவ்வாறான சம்பவங்களுக்கு பொலிஸார் துணைபோகீறார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது” என்றார்.

அத்துடன் யாழில் நடைபெறுவதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது விபச்சாரத்திற்கும் இங்கு நடைபெறும் சம்பங்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை

‘ஆணும் பெண்ணும் அறையில் இருப்பது விபசாரமல்ல’

பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் தனியாக அறையில் இருப்பதை விபசாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யாழ். நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு ஒரு ஜோடியினர் யாழ். பிரதேச செயலாளரினால் பிடிக்கப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக, விடுதி முகாமையாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் நடவடிக்கை தவறானது என சுட்டிக் காட்டப்பட்டது.

மேற்படி விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்போது குறித்த விடுதி முறையற்ற ரீதியில் நடத்தப்படுவதாக யாழ். பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபானசாலைக்கான வரி அனுமதியின்றி விடுதி நடத்தப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்து அவ்விடயம் தொடர்பாக ஆராய சென்றவேளையிலேயே குறித்த யுவதி இளைஞருடன் தனியாக இருந்ததாகவும் யுவதியிடம் அடையாள அட்டை இல்லாத நிலையில் இருந்தார் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அங்கிருந்த யுவதியை மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தேன், பெண்கள் அமைப்பின் படி தான் செய்தது சரியென்றும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.

என்னை பொறுத்தவரையில், 18 வயது பெண்ணும், 21 வயது ஆணும் தனியாக அறையில் இருப்பது விபசாரமல்ல, காசுக்காக பெண்ணொருவர் பல இளைஞர்களுடன் இருப்பது தான் விபசாரமாகும்.

அவ்வாறு யாழ்.நகரில் விபசாரம் நடக்கின்றது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அது உறுதிப்படுத்தப்படுமாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

வடக்கில், வேறு கலாசாரம், தெற்கில் வேறு கலாசாரம் ஆனால், வடக்கிலும், தெற்கிலும் சட்டம் ஒன்று தான், நாங்கள் சட்டத்தின் படி பார்க்கின்றோம் என்றார்.

Related Posts