தொழில் தேடுவோர் அல்லது சுயதொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு மாவட்ச் செயலரின் விசேட அறிவிப்பு!!

தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் அல்லது சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க முயற்சிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு யாழ்.மாவட்டச் செயலர் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டச் செயலகமானது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள தொழில் தேடுவோர் மற்றும் புதிதாக சுயதொழில்...

அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை அதிகரிப்பு!

40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை 40 பக்க CR...
Ad Widget

தற்காலிகமாக ஓட்டுநர் உரிமத்தின் காலம் நீடிப்பு!

6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பளை பிரதேசத்தில் உள்ள காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை – டக்ளஸ்

பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுமபோது ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென...

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மீட்கப்பட்ட அனைத்து வாள்களும் கோயில் பாவனையில், கோவிலின் உள்ளேயே இருந்துள்ளதாகவும், வாள்கள் கோவில் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுபவை எனவும் விசாரணையில்...

தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிப்பு!!

தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நுழைவுச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலவசமாக கட்டணம் செலுத்தாது பிரவேசிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் பிரஜைகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் 500 ரூபா கட்டணமும், வரையறையில்லா அடிப்படையில் 2000 ரூபா கட்டணமும் அறவீடு செய்யப்படும்...

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அது குறித்து மேலும் பேசிய அவர், "இப்போது பலர்...

கொழும்பில் இருந்து திருகோணமலை சென்ற ரயிலில் தீ!!!

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதிய சிவப்பு நிற ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. . தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்...

மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பு

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி,...

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்...

அரசியல் தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு – கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி 44 ஆவது நாளான இன்று கிளிநொச்சி கோரக்கன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்றது. வடக்கு...

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்!

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது, ​​அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார். தற்காலிக நடவடிக்கையாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ்...

மலசல கூடம் பராமரிப்பி இன்றி, பாவனைக்கு உதவாத நிலையில்!!

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரி நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் இன்றும் தொடர்கிறது

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (12) வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வஜன...

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டில் வெளியேறி உள்ளார்கள். சுகாதார துறையில்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு!

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு...

கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் . உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து...

யாழில் அண்ணன் செய்த செயலால் தங்கை தற்கொலை!

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது....

திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக யாழில் விசேட சந்திப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக...
Loading posts...

All posts loaded

No more posts