- Monday
- June 15th, 2026
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி...
யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை (05) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு...
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், அவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில்...
வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கநேற்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது/ இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நேற்றையதினம் முற்பகல் 11மணிக்கு வவுனியாவில் உள்ள சுற்றுலா ஓய்வு விடுதியில்...
இரா.சம்பந்தன், பொதுவெளியில் தன்னை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்று நடைபெற்றிருந்தன. இந்த சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். மேற்படி சந்திப்புக்கள் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா...
உக்ரைன் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கு இடையே சந்திப்பை நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சித்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்றும் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது....
தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்புதிய சமூக புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் தவறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாகவே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய...
மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்...
மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் உயிரிழப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. மதுவின் வருமானத்தை விட மதுவினால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார சேதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. கடந்த 2015ம்...
கிராம உத்தியோகத்தர் பதவிக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர்...
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இன்று காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை (03) காலை 8 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) சேவை ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக அந்த சேவைகளைப் பெற...
தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்த அவர் அளித்துள்ள முறைப்பாட்டில் ”யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகமொன்று இயங்கி வருகின்றது. குறித்த கட்சியினரை வெளியேறுமாறு நான் பல தடவைகள் கோரிய...
யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு அவரிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள் மற்றும், 7 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும்...
நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ வுடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்துருந்தார்....
இன்று முதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒடோ டீசல்...
Loading posts...
All posts loaded
No more posts
