Ad Widget

மக்கள் போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்புறப்படுத்தமை ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக கணிப்பிடப்பட்டுள்ளது. வழமை போன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன், சிறீதரன் போன்றோர் தமது சொகுசு வாகனங்களில் வந்திறங்கி கைகளில் எடுத்து வந்த பேனர்களை பிடித்தவாறு மக்கள் போராட்டத்தினை வழிநடத்த...

மாணவனின் மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கிய அதிபர்!!

பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவன் வகுப்பறையில் குழப்படி செய்தமைக்கு, தண்டனை வழங்குவதற்காக இவ்வாறு மர்ம உறுப்பை பிடித்து தண்டனை வழங்கியுள்ளார்....
Ad Widget

மாவை, சரவணபவனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கெதிராக யாழ். நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கைத் திறந்துவைக்க சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பயணம் செய்திருந்தார். இத்திறப்பு விழாவுக்குவந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவபணபவன் தனது மகளின்...

யாழில் மாணவன் இறந்த விபத்து முன் திட்டமிடப்பட்டதா ? அதிர்ச்சியளிக்கும் சி.சி.ரி.வி வீடியோ !

காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்த நிலையில் அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பட்டா டிமோ சாரதிஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள சி.சி.ரி.வி கமராப் பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறித்த...

ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த மாணவர்கள்!!

மட்டுவில் பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சவாரி செய்த பாடசாலை மாணவர்கள் மூவரில் பிரதான சந்தேகநபரான மாணவனை அச்சுவேலியில் அமைந்துள்ள அரச சான்றுபெற்ற பாடசாலையில் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை (23) உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ஏனைய இரு மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி பிணையில்...

போலி நாணயத்தாள் மோசடி: பெண் உட்பட மூவர் கைது

நகையை அடகுவைத்து வங்கியில் பெற்றுக்கொள்ளப்பட்ட நான்கு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2 இலட்சம் ரூபாய், போலி நாணயத்தாளாக வழங்கப்பட்டது என பெண் ஒருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார், மூவரைக் வியாழக்கிழமை (24) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார்,இன்று...

16 பெண்களுடன் திருமணம் 36 பிள்ளைகள் ; இலங்கையில் இந்த நிலை!

திருகோணமலை- குச்சவௌி பொலிஸாரினால் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கேகாலை பகுதியைச்சேர்ந்த ஜே.ஏ.துஸ்வந்த கயான் ஜயவீர (46 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து...

வங்கியில் வழங்கிய பணம் போலி: பெண் முறைப்பாடு

மானிப்பாய் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றினால் தனக்கு வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாய் நாணயத்தாள்கள் போலியானது' என்று கூறி, இளவாலை பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை (23) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். இளவாலை, பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண் ஆனைக்கோட்டையிலுள்ள தனது தங்கையின் திருமணத்துக்காகச் சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட அவசர பணத்தேவை காரணமாக, தனது தாலிக்கொடியை...

கிளிநொச்சியில் குடும்பமொன்று உண்ணாவிரதம்

பல தசாப்தங்களாக குடியிருக்கும் காணியிலிருந்து தம்மை விரட்ட முற்படுவதாக தெரிவித்து கரைச்சி பிரதேச செயலரிற்கு எதிராக குடும்பமொன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெற்றது. கிளிநொச்சி – ஆனந்தபுரத்தைச் சேர்ந்த முத்தையா விஜயநாதன் என்ற குடும்பத்தவர், மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் முதிய...

அது முதல் கணவன்.. இது இரண்டாவது புருஷன்!!!

இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக...

தமிழ் மொழியினால் சபையில் தடுமாற்றம்

சபையின் நேற்றையதின பிரதான நடவடிக்கைகள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்டன. இதனால் சபையில் பல தடுமாற்றங்கள் நிலவியதை அவதானிக்க முடிந்தது. ஆளும், எதிரணி உறுப்பினர் பலரும் தடுமாறிப் பேசினர். அவைக்குத் தலைமை தாங்கிய செல்வம் அடைக்கலநாதன், சபாநாயர் அறிவிப்பு முதல் அக்கிராசனத்திலிருந்து தான் எழுந்து செல்லும் வரையிலான சகல நடவடிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் கட்டளைகளையும் தமிழ் மொழியிலேயே...

மாணவர்களை கௌரவிக்க மறுத்த பாடசாலை அதிபருக்கு அழைப்பாணை!

மாணவர்களை கௌரவிக்க மறுத்த அதிபர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபரின் செயற்பாட்டால், குறித்த கல்லூரில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மாணவர்களின் பெற்றோரால் மனித உரிமை...

மாணவி துஷ்பிரயோகம் : அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

தென்மராட்சி - வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நன்னடத்தைப்பிரிவினரிடமும், கொடிகாமம் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு பலி

யாழ். போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தரின் பொறுப்பற்ற செயலால் பிறந்த சிசு ஒன்று சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துபோன துயரச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்திரசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஒட்சிசன் வழங்கவேண்டிய நிலையில்இ விடுதியில் ஒட்சிசன் சிலிண்டர் இருக்கவில்லை. இதுவே குழந்தை மரணமடையக் காரணம்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் சொன்ன விநோத கதை

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், தான் ஏன் கஞ்சா செடியை வளர்த்தேன்? என்பதற்கு விநோதமான காரணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) கூறினார். கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்தனர். மேற்படி நபர் 3...

தலைகீழாக நின்று ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள்

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடாத்த வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் கினித்தேன பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்பாக தலைகீழாக நின்று 14.06.2016 அன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே மேற்படி...

பாலியல் லேகியம் சாப்பிட்ட யாழ். மாணவர்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்தரவகுப்பு பாடசாலை ஒன்றில் மாணவர்களும் மாணவிகளுமாகச் சேர்ந்து பாலியல் லேகியம் சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் அவர்கள் போதை ஏறி தமக்குள் சண்டையிட்டதன் காரணமாக 4 மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் குறித்த மாணவர்கள் சீருடையுடனேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை வைத்தியசாலையில் ஆசிரியர் ஒருவரே அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள்...

முல்லைத்தீவில் மாணவர்கள் மயங்கி வீழ்வது எதற்காக? நடப்பது என்ன?

யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி துரிதமடைகிறது. வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானங்கள் சிறப்பாக நடக்கிறதென அரசு சொல்லித்திரிந்தாலும், யதார்த்தமென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. யுத்தத்தால் சிதைவடைந்த பகுதி மக்களின் வாழ்க்கையும் சிதைவடைந்துதான் கிடக்கிறது. அரசின் எந்த புனரமைப்பு திட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவவில்லையென்பதே யதார்த்தம். யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலொன்றான முல்லைத்தீவில் நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் அபிவிருத்தி...

ஆசிரியையின் தாக்குதலில் 5ம் ஆண்டு மாணவன் படுகாயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியை ஒருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. பிரத்தியோக வகுப்பு நடத்திய ஆசிரியையே இம்மாணவனை தாக்கியுள்ளார். காத்தான்குடியிலுள்ள மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் (வயது 10) எனும் மாணவனே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

உள்ளக கணக்காய்வு பிரிவை தவிர்ந்து எஞ்சியவர்கள் சோம்பறிகள்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவுடன் சேர்த்து சில பிரிவுகள் மாத்திரமே வினைத்திறனுடன் செயற்படுவதாகவும் மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் சமய கலாசாரப் பிரிவு என்பன படுமோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாவட்டச் செயலகத்தின் வினைத்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்யும், செயற்றிறன் முகாமைத்துவ விளக்கப்படத்தின் மூலம் அறியமுடிகிறது. ஜப்பானின் 5 எஸ் முறையை பின்பற்றியமை,...
Loading posts...

All posts loaded

No more posts