யாழில் இருந்து மன்னாருக்கு 6 ரூபாய் 50 சதம்?

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு செல்வதற்கு 6 ரூபாய் 50 சதம் பயண சீட்டை கொடுத்தமை, பயணிகளுக்கு பயண சீட்டை வழங்காமை, கணக்கிற்கு அதிகமாகவும், குறைவாகவும் பயண சீட்டு பணங்களை வைத்திருந்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் மீள பணியில் அமர்த்த யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குறித்த...

இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் முல்லைத்தீவில் பதற்றம்!!!

முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்தப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இருவரே துப்பாக்கியை...
Ad Widget

நிரந்தர நியமனம் கிடைக்காத மன விரக்தியில் தொண்டர் ஆசிரியை தற்கொலை!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நிரந்தர நியமனம் கிடைக்காத மன விரக்தியில் நேற்று மாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் முல்லைத்தீவு மாடவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காணமால் ஆக்கப்பட்ட அதிபர் தொடர்பில் கேட்காது , நீச்சல் தடாகம் கேட்டது மனவேதனையாக உள்ளது!!

காணாமல் ஆக்கப்பட்ட எமது கல்லூரி அதிபர் தொடர்பில் கேட்காது கல்லூரிக்கு நீச்சல் தடாகம் அமைத்து தருமாறு கல்லூரி நிர்வாகம் கோரியது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக போராடத்தில் ஈடுபட்ட புனித பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட...

யாழில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்ற பொலிஸார்!!!

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை...

யாழ். வங்கி பண மோசடி: கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000...

சட்டவிரோத மணலுடன் எடுத்துவரப்படும் வெடிபொருட்கள்!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

யாழ். முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.அங்கு அகழப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக்...

காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட குடும்பஸ்தர் தற்கொலை!!

காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு கெங்காதரன் (வயது 61) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம்...

யாழ் நகரில் வாங்கிய சோற்றுப்பாசலினுள் புளுக்கள் ! : நடவடிக்கை எடுக்காது அலைக்களித்த சுகாதாரத்துறை !!

யாழ் நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகத்தில் கடந்த புதன்கிழமை...

தூக்கில் தொங்கிய இளைஞனின் காதலி கிணற்றில் குதித்து தற்கொலை!!!

வவுனியா - கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த விடுதியில் நேற்று முன்தினம் மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார்....

வாள் வெட்டுக்கு இலக்கான யாழ் பல்கலைக்கழக மாணவன்!

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவனொருவன் வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்த இரு பெண்பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்ததால், அப்பெண்ணின் கணவனே இவ்வாறு வெட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் தொடை மற்றும் பிட்டப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்குள்ளான மாணவன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்...

பத்திரிகையில் வெளியான செய்தியால் யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி!

பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காததால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். யாழில். உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னதாக, மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்த போது அவர் அங்கிருந்தவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார். யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகியதால், அவர்...

இரணைமடுவில் வேறு இடத்திற்கு நகர்த்தப்பட உள்ள அரச மரம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் காணப்பட்ட அரச மரம் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. படையினரால் பாரிய குழியினை ஏற்படுத்தி, அரச மரம் பாதிக்கப்படாத வகையில் அதனை நகர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் இந்த அரச மரம் வேறொரு இடத்தில் வைக்கப்படலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்....

பதவிக்கு வருமுன் STF பாதுகாப்பை கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை வேட்பாளர் ஒருவர் தான் பதவிக்கு வருவதற்கு முன்னே தனக்கான பாதுகாப்பை கோரியமை தொடர்பான விடயம் சக உறுப்பினர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாநகர சபை வேட்பாளராக களமிறங்கிய உறுப்பினர்களில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார...

பொலிஸார் போதையில் நின்றனர்!! : சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவிப்பு!!

போதையில் நின்ற பொலிஸாரால், பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக என சட்டத்தரணியால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதன் போது குறித்த இளைஞர் சார்பில்...

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள்!!!!

நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில்...

“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்

தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார். பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு,...

14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இணைந்து செய்த நல்ல காரியம்!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வீடமைத்து வழங்குவதற்கான அடிக்கல் நேற்றயதினம் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடயவியல் பிரிவில் கடமையாற்றும் ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, வீடு ஒன்றை நிர்மாணித்து...

யாழ் பொலிஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரியான செயற்பாடு!

மாணவன் ஒருவரால் யாழ்.நகரில் தவறவிடப்பட்ட பணப்பையை (பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது. கொக்குவிலைச் சேர்ந்த மாணவன் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார். அந்தப் பணப்பை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு முனபாக வீதியில் கிடந்துள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts