யாழில் போதை ஊசிகளால் 10 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும்...

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின....
Ad Widget

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என எச்சரிக்கை!

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன. 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தண்டனையிலிருந்து விடுபடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான நிறுவன,...

இலங்கைக்கு கிடைக்கும் பல கோடி அமெரிக்க டொலர்கள்!

சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல் ஆறுமாத கால பகுதியில் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகவும் இது தவிர ஆசிய...

தொலைபேசி சேவைக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி, லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் கட்டணங்கள் மற்றும் பிற ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்...

துப்பாக்கிப்பிரயோகங்களை கட்டுப்படுத்தாது போராட்டங்களை முடக்க படையினர் குவிக்கப்படுகின்றனர் – சுமந்திரன்

ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது. நாட்டில் தீவிரமடைந்துள்ள துப்பாக்கி பிரயோகங்களை தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் போராட்டத்தை முடக்க ஆயிரகணக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுப்படுத்தப்படுகிறார்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1)...

பொன்னாலை – பருத்தித்துறை வீதி முற்றாக திறப்பு!

கீரிமலை ஊடான பொன்னாலை - பருத்தித்துறை வீதியினை மக்கள் பாவனைக்காக முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் குறித்த வீதி காணப்பட்ட நிலையில் கடந்த நல்லாட்சி கால பகுதியில் அப்பகுதி மக்கள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு வீதியும் திறந்து...

அரிசி உள்ளிட்ட 48 பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு நபரும் கோரும்...

70 பேருக்கு கொவிட் தொற்று!! 5 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 ஆணும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் மேலும் 70 பேருக்கு கொவிட் தொற்று...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...

91 அத்தியாவசிய மருந்துபொருட்கள் முற்றாக தீர்ந்துபோகும் நிலை!!

நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவ களஞ்சியத்தில் கடந்த வாரம் இந்த நிலை காணப்பட்டதாக அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால்...

கொரோனா பரவல் எந்த கட்டுப்பாடும் இன்றி சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரிப்பு?

இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய்...

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதம தொற்று நோய் விசேட நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் ஊடாக கொரோனா பரலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக...

தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில் ஒருவர் கிளிநொச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்!!!

இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து நேற்றுமுன்தினமும் நேற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த...

பாடுபட்டு உழைக்கத் தயாரில்லாத அரச உத்தியோகத்தர்கள் தொழிலை விட்டுச் செல்லலாம் – ஜனாதிபதி ரணில்

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை...

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். நிலவும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவதற்காக வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதியளவு எரிபொருள் இருப்பதாக கூறும் அமைச்சர்...

யாழில் சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்! 7 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இந்த கைது...

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தலையிடக்கூடாது!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர் என்றும் இந்த விடயத்தை அரசியல் லாபத்திற்காகவே கூட்டமைப்பினர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,...

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் கோவிட்-19 நோய்த்தொற்றினால் சாவு!!

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்றிரவு உயிரிழந்தார். கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள்...
Loading posts...

All posts loaded

No more posts