வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் யாழ்ப்பாணம் மருதனாதமடத்தில் கடந்த 23ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. (more…)

சமய வணக்கஸ்தலங்கள் அமைப்பதை கண்காணிக்க புதிய சுற்றுநிரூபம்

சமய குரோத உணர்வுகளை தடுக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக நாட்டில் சமய வணக்கஸ்தலங்கள் அமைப்பதை கண்காணிப்பதற்கான ஒரு புதிய சுற்றுநிரூபத்தை அரசாங்கம் விடுத்துள்ளது (more…)
Ad Widget

சர்வதேச, உள்ளூர் இசைக் கலைஞர்களுடன் யாழ்ப்பாணத்தில் மீண்டும் இசை விழா

யாழ். இசைவிழா- 2013 இவ்வருடம் யாழப்பாணத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 1ம், 2ம் திகதிகளில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு எதிரே உள்ள யாழ். மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. (more…)

வட பகுதியில் ஊடுருவியுள்ள விஷக் கிருமிகள்: சண். குகவரதன் எச்சரிக்கை

வடபகுதி இளம் சமூகத்தின் மத்தியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் சில விஷக் கிருமிகள் ஊடுருவியுள்ளன. எனவே, எமது சமூகம் விழிப்பாக இருந்து மண்ணின் மகிமையை பாதுகாக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். (more…)

போதைப் பொருள் பாவனையிலிருந்து இளையோர் விடுவிக்கப்பட வேண்டும்!

மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும். (more…)

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு; சாடுகிறார் முன்னாள் நீதியரசர்

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். (more…)

ஈழத்து எழுத்தாளரின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

ஈழத்து எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவிக்கும் முகமாக ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. (more…)

யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம்

இலங்கையில் யாழ்ப்பாண ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆதீனம் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இதன் நிர்வாகக் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஜெயரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் இந்தியாவின் பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகள் தெரிவித்துள்ளார். (more…)

யுத்த காலத்தில் அழிந்து போன கலைகளை வளர்க்க அனைவரும் ஒன்றிணைவோம் ; அரச அதிபர்

யாழ். மவட்டத்தில் 38ஆயிரம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்கள் இன்றி உள்ளனர் இவர்களுக்கு கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சில் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சிடம் யாழ். அரச அதிபர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளானர்.யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாசார மற்றும்...

நெடுந்தீவு முகிலனின் ‘வெள்ளைப் பூக்கள்’

நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப் பூக்கள் என்ற குறுந்திரைப்படம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ் ஞானம்ஸ் உல்லாச விடுதியில் 08-03-2012 வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விநோதினி சிறீ மேனன் வரவேற்புரையையும், அறிமுக உரையினை ரி.கிருபாகரனும் (இலண்டன்), தலைமை...

கனவுகள் வளர்த்திடுவோமே பாடலுடன் Dr.A.P.J. Abdul kalam இன் யாழ் இந்துக் கல்லூரிக்கான விஜயம் பற்றிய ஒளித் தொகுப்பு

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களால் அண்மையில் வெளியிடப்பட்ட சங்கமம் இசைத் தொகுப்பில் உள்ள பாடல் ”கனவுகள் வளர்த்திடுவோமே..புதிய கலைகள் வளர்த்திடுவோமே..இந்துவின் மைந்தராய் இமையத்தை வென்றிடவேண்டும்.”எனும் பாடல். இப்பாடலில் Dr.A.P.J. Abdul kalam ,இன் “இளைஞர்களே கனவு காணுங்கள்” என்ற வார்த்தைக்கு அமைய அவருடைய அனுபவங்கள், தத்துவங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு பாடப்பட்டது இப்பாடல். (more…)

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலைவெறிடா!

தனுசின் கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள "என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலைவெறிடா" இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)...