Ad Widget

கோண்டாவில் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தில் 4 பேர் கைது

வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வல்வெட்டித்துறை கோபுரமொன்றில் புலிக்கொடி ஏற்றிய நபர் கைது

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் புலிக்கொடியை பறக்கவிட்ட நபர் உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேர் கைது

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.முகமட ஜெவ்ரி இன்று(7) தெரிவித்தார் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. (more…)

சட்ட விரோதமாகத் தொழில் புரிந்த ஐவருக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம்

சட்டவிரோதமான இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி கடலட்டை பிடித்த 4 பேரும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். (more…)

இனந்தெரியாத நபர்களின் கத்திக்குத்தில் வயோதிபர் காயம்

யாழ்., புத்தூர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் வயோதிபர் ஒருவர் அச்சுவேலி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

நேற்றய தினம் மட்டும் 5பேர் கைது

பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (07-12-2012) 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார். (more…)

மதிலை உடைத்து வீட்டினுள் நுழைந்த வான்!, தாயும் மகனும் படுகாயம்

யாழ். மல்லாகம் சந்தியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயொருவரும் அவரின் 4 வயதுடைய மகனும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழிலிருந்து மல்லாகம் நோக்கி சென்ற வான் ஒன்று அங்கு கடமையில் நின்ற பொலிஸாரை கண்டதும் மிக வேகமாக செல்ல முற்பட்டுள்ளது. (more…)

வெட்டுக் காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு; கொக்குவில் பகுதியில் நேற்றிரவு பயங்கரம்

கொக்குவில் பகுதியில் நடுத்தர வயது ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் யார் என நேற்றிரவு வரை அடையாளம் காணப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். (more…)

நீதவானின் பணப்பையினை ‘பிக்பொக்கட்’ அடித்த இருவருக்கும் விளக்கமறியல்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து நேற்றுக்காலை வவுனியா நீதவான் எலக்ஸ் ராஜாவின் பணப்பையினை பிக்பொக்கட் அடித்ததாக கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்தவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . (more…)

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை ! ரூ.47,000 தண்டம் வசூல்

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த 24 வர்த்தகர்களுக்கு 47,500 ரூபா தண்டப்பணம், யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார். (more…)

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். (more…)

பாடசாலைகளில் நன்கொடை கேட்டால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம்

பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை கடத்த முயற்சி

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், பல்கலைக்கழக பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

சுட்டி விளக்குகள் விற்ற வர்த்தகர் மீது தாக்குதல்

கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

காசோலை மோசடி

கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

போலி நகைகளை 4 முறை வங்கியில் அடகு வைத்தவர் கைது

தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். (more…)

ஈமெயில், எஸ்.எம்.எஸ்.மூலம் பணமோசடி யாழில் அதிகம்; எச்சரிக்கிறார் மத்திய வங்கி அதிகாரி

மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா.சிவதீபன் முன்னெச்சரிக்கை செய்துள்ளார். (more…)

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 125 பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் சிறுகுற்றம் புரிந்த 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.இ.எரிக்பெரேரா தெரிவித்தார். (more…)

உதயன், வலம்புரிக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

புலிக்கொடியை பறக்க விட்டது யார் ? தேடுகின்றனர் பொலிஸார்

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி பறந்தமை தொடர்பில் எவரும் கைது செய்ய்படவில்லை புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts