Ad Widget

கத்திக் குத்தில் இளைஞர் பலி; 15 வயது சிறுவன் கைது

யாழ். பாஷையூர் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவமொன்றில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பாசையூர், மூன்றாம் குறுக்குதெருவை சேர்ந்த ஏ.பி.தனுஷ் தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் தனது அலுவல்களை முடித்துகொண்டு இரவு வேளையில வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கத்திக் குத்துக்கு இழக்கானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts