- Sunday
- July 12th, 2026
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 05 பேர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை-கல்லேல பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் வழங்கப்பட்வர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903 ஆம் ஆண்டு மே 03ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச...
வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அனுராதபுரம் வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று 2020.12.16 இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல்...
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது....
கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள கட்டட வளாகத்தில் சிதைவுற்ற பொருள்கள் களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு கோப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களம் இந்த தீ சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “இன்று (16-12-2020) மாலை 4.45...
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய அடுத்த ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின்...
கண்டி- உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்தன. இந்நிலையில் குறித்த குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குரங்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால்,...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றார். நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமையில் அமைச்சரவை கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது....
இம்முறை வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தும் நடவடிக்கை, மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள்...
பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினத்தை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தேசத்தை உருவாக்கும்போது, நக்பா மற்றும் பலஸ்தீனர்கள் தங்களது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர். அதன்போது இடம்பெற்ற நகரம் மற்றும் கிராமத்தை அழிக்கும் பேரழிவின் எதிரொலியாக 1978ஆம் ஆண்டு ஐக்கிய...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள், கௌரவ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை கௌரவ...
'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மாகாண மட்டத்தில் நடத்தப்படும் கூட்டம் (2020.12.14) தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் என கடந்த 27ம் திகதி முற்பகல் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும்...
மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். எனினும் இந்த அனர்த்தத்தில்...
கண்டி பழைய போகம்பறை சிறையில் இருந்து தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் தப்பிக்க முயன்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் கைதி ஒருவர் தப்பித்துள்ளதுடன் மேலும் 3 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தபித்த கைதியை கைது செய்வதற்கான தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை...
மாத்தளை மாவட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவில் 06 தேசிய பாடசாலைகள்..... 2021 முதலாவது காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு..... ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.... மாத்தளை மாவட்டத்திற்கு உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்.... உலகளாவிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும்...
• உலக பாரம்பரிய நகரமான பொலன்னறுவை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யப்படும்.... • விவசாய ஓய்வூதிய திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும்.... • பொலன்னறுவைக்கு 700 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருளாதார மத்திய நிலையம்.... • காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கு புகையிரத சேவையை பயன்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கவனம்.... உலக...
• கண்டியில் தலா 100 மில்லியன் ரூபாய் வீதம் 400 மில்லியன் செலவில் 04 தேசிய பாடசாலைகள்.... • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 2000 ரூபாய் வீதம் போhக்கு பொதி.... • ஆயுர்வேதம் என்ற பெயரில் இயங்கும் போலி மசாஜ் பார்லர்கள் மீது சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை.... • மத்திய மாகாணத்தில்...
கோவிட் – 19 நோய் காரணமாக அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக இரண்டு பேர் உயிரை மாய்த்துள்ளனர் என்று பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகலவத்தை மற்றும் ஜா-எலவைச் சேர்ந்த இரண்டு பேர் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதியாகப் பணிபுரிந்த 56 வயது நபர் நேற்று அகலவத்தையில்...
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும்...
மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, டேம் வீதி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ்,...
Loading posts...
All posts loaded
No more posts
