நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்!

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுமென டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய இணைப்பாளரும் விசேட வைத்தியருமான ஹசித்த திசேரா தெரிவித்துள்ளாா். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “2017ஆண்டில் டெங்கு நோயாளர்களின்...

வியாழன் தான் நவராத்திரி ஆரம்பம்

நவராத்திரி ஆரம்பம் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வருட நவராத்திரி விரதம் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை முறையே 20.09.2017 புதன் கிழமை மற்றும் 21.09.2017 வியாழக்கிழமை என இரு வேறு தினங்களை குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்து...
Ad Widget

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்த வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி இறுதி கால எல்லையாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயமாக்கி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால்...

வட. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று மின் தடை!

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) திருத்த வேலைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதன்படி, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ். குடாநாட்டின் மானிப்பாயின் ஒரு பகுதி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 09 மணி முதல்...

குப்பை சேகரிப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு யாழ் மாநகர சபையின் அறிவித்தல்!

யாழ் மாநகர சபையினால் பொதுமக்களுக்கு குப்பை சேகரிப்பது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. சபையினால் புதிதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையின் பிரகாரம் குப்பை சேகரிக்கும் ரக்டர்கள் தங்கள் வீதிகளுக்கு சுழற்சிமுறையில் வருகைதர இருக்கின்றன. தங்களால் உருவாக்கப்பட்ட / உருவான குப்பைகளை உக்கக் கூடியன , உக்கமுடியாதன, இலத்திரனியல் கழிவுகள் என வேறுவேறாகத் தரம்பிரித்து குறித்த...

காலநிலையில் மாற்றம்: நாளை முதல் கடுங்காற்று!

நாட்டில் வடக்கு வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோர பிரதேசங்களில் நாளை முதல் பலத்த காற்றுவீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை)...

காட்டை விட்டு வீதிக்கு வரும் யானைகள்! : அச்சத்தில் நெடுங்கேணி பொதுமக்கள்

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக பயணித்தோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்று மாலை முதல் குறித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்தோர் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக அச்சத்துடனேயே பலரும் அவ்வீதியில் பயணங்களை மேற்கொண்டதாகவும், அப்பகுதியில் தற்போது மாலை நேரங்களில் யானைகள்...

இன்று முதல் மின்சார சபை ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நுகர்­வோரின்...

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்! காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்!!!

செப்­டெம்பர் 20 முதல் 26 வரை­யான ஒரு­வார காலம் தேசிய டெங்கு ஒழிப்பு வார­மாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது, டெங்கு ஒழிப்பு துப்­பு­ரவுப் பணிகள் நாட­ளா­விய ரீதியில் முன்னெடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் மழையுடன் கூடிய கால­நி­லையைத் தொடர்ந்து, டெங்கு நோய்த்­தாக்கம் அதி­க­ரித்­துள்­ள­தாக குறிப்­பிடப்படு­கின்­றது. வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட்டின் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் இனங்காணப்­பட்­டுள்­ளனர்....

சையிட்டம் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு: யாழில் இருந்து பேரணி!

சையிட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சையிட்டம் எதிர்ப்பு மக்கள் அரணின் ஏற்பாட்டில் எதிர்ப்பு வாகன பேரணி யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட உள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, யாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தம்!

சைட்டம் தனியார் வைத்­திய கல்­லூ­ரிக்கு எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நாளை 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ள­தாக குறித்த சங்­கத்தின் செயலாளர்...

இலங்கையின் ஐயாயிரம் ரூபா தாளுக்கு தடை?

இலங்கையில் நாணயத்தாள் அச்சிடும் போது போலி அச்சிடலை தடுக்கும் தொழில்நுட்ப முறை ஒன்று கடைப்பிடிக்காமையினால் நாடு முழுவதும் போலி நாணயத்தாள் உள்ளதாக அரசாங்க அச்சுப்பொறி திணைக்களம் தெரிவித்துள்ளது. போலி நாணயத்தாள் அச்சிடப்படுவது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் முறைப்பாடு பதிவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக நாடு...

தனியார் காணிகளைக் கையகப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!

விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ள தனியார் காணிகளை அரசமயப்படுத்தி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ள கூடிய வகையில் தற்போது இருக்கின்ற சட்டத்தின் கீழ் விசேட அரச வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் பாரிய அளவிலான தனியார் காணிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக சிறிசேன தெரிவித்தார்....

25000 தண்டப்பணம் சிலநாட்களில் அமுல்! தலைக்கவசங்களுக்கு SLS தரச்சான்றிதழ் அவசியம்!!

வீதி விதிமீறல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா என்ற அபராதத் தொகையை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஏற்பாடுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். குறித்த அபராதத் தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரமளவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மோட்டார் சைக்கிள்களின் தலைக்கவசங்களுக்கு...

சடலத்தினை அடையாளம் காணுமாறு பொலிஸார் வேண்டுகோள்

சென்ற மாதம் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வாறு விபத்து சேவை பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர். மேற்படி புகைப்படத்தில்...

அரசாங்க ஊழியர்களின் வேலை நேரத்தில் சலுகை!

போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் எதிர்வரும் 18ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்...

போக்குவரத்துக் குற்றங்களுக்கு வழங்கும் சீட்டுகளை பொதுமக்களுக்கு விளங்கும் மொழியில் வழங்க நடவடிக்கை!

போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு...

தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட பிரகடனம்

நேற்று முன்தினம் {05/09/17} யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் " எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்வெளியிடப்பட்ட பிரகடனம். பிரகடனம் தமிழ் மக்கள் பேரவை 05/09/17 1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய...

தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும்! : அனைவருக்கும் அழைப்பு

‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘ தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும். செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம் தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக...

இலங்கை மக்களை மலேரியா தாக்கும் அச்சுறுத்தல் உள்ளது!

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார். மலேரியா நுளம்பின் தாக்கம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...
Loading posts...

All posts loaded

No more posts