Ad Widget

பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு!!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய நேற்று ஆரம்பமானது.

இவ் வேலைத்திட்டம் இன்றும் தொடரும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts