தமிழர் விடுதலைக் கூட்டணி மைத்திரிக்கு ஆதரவு என அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ். மாவட்டக்கிளை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத...

மைத்திரி 30 இல், மஹிந்த 2 இல் வடக்கில் தீவிர தேர்தல் பிரசாரம்!

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும் பிரசாரத்தை நடத்திவிட்டு கிழக்கு மாகாணம் சென்றிருந்தார்...
Ad Widget

வடக்கு வரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும்!

வட பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வருகின்ற வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வட பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி...

தமிழருக்கு ஏமாற்றம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடாதமை ஏமாற்ற மளிப்பதாகவே அமைந்துள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்...

இம்முறை பெண் வாக்காளர்கள் அதிகம் -யாழ் அரச அதிபா் தகவல் !

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....

யாழ். மாவட்டத்தில் அதிக பெண்கள் வாக்களிக்க தகுதி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் தகுதி பெற்ற 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேரில் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 186 பேர் பெண் வாக்காளர்கள் என யாழ். மாவட்ட செயலாளரும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்....

தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரிக்கை!!

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்புசார் இன அழிப்புக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆட்சி மாற்றம் என்ற போர்வையில் வெறும்...

தேர்தல் பரப்புரைக்கு சிறைக் கைதிகளை பயன்படுத்தும் ஆளும் கட்சி – கபே

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைக்காக சிறைக் கைதிகளை பயன்படுத்தப்படுவதாக கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல நிற சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்து சிறை கைதிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபே விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை கம்புறுபிட்டியவில் நேற்றுக் காலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல்...

டிசம்பர் 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு, 50000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் என்பனவற்றில் வைக்கப்பட்டுள்ளதாகத்...

தமிழர்களை முழு அளவில் வாக்களிக்க வலியுறுத்துகின்றது தமிழ்க் கூட்டமைப்பு

வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

ஜனாதிபதி தேர்தலில் விசித்திர சின்னங்கள்

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என...

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டனர் -தம்பி மு. தம்பிராசா-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா அவர்கள் இன்று (07.12.2014) கொழும்பில் நடாத்திய ஊடாக மகாநாட்டில் முக்கியமான பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களுமே கடந்த...

மைத்திரியிலும் திருப்தியில்லை – சுரேஸ் எம்பி!

இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் தமிழர்களின் பிரச்சனை குறித்து சாதகமான  தீர்வுகளை முன்வைக்கவில்லை. இதனால் இருவேட்பாளர்களிலும் நாம் திருப்தியடைந்திருக்கவில்லை  என தமிழ்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்  ஊடகம் ஒன்றுக்கு கருத்துகூறியுள்ளார். அரசுக்கட்சியோ சிறுபான்மையினரின் வாக்குகளில் தாம் தங்கியிருக்கவில்லை என கூறியுள்ளது. அதேவேளை மைத்திரி பால சிறிசேன அவர்களின் அண்மைக்கால கூற்றுக்கள் எமக்கு எதிரான...

ஜனாதிபதி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 19 வேட்பு மனுக்களும் ஏற்பு!

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் சமர்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும், 1981ஆம் ஆண்டு தேர்தல் சட்டதின் 15ஆம் இலக்க இலக்க தேர்தல் சட்டப்பிரமாணங்களின் படி தேர்தல் சட்டவிதிகளுக்கிணங்க கையளிக்கப்பட்டமையால், அனைத்து வேட்பு மனுக்களும் தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்தார். இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 17...

வேட்பு மனுத்தாக்கல் நேரலை…

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தற்போது நடைபெறுகின்றது.

12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவளை கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம்...

தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றல் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கின்ற அரச உத்தியோகஸ்தர்களின் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திகதி எக்காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும், மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான (more…)
Loading posts...

All posts loaded

No more posts