Ad Widget

பூஞ்சை தோல் நோய் பரவும் அபாயம்; மருத்துவ ஆலோசனையைப் பெற பரிந்துரை

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருக்கு தோல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு தோல் மருத்துவ வல்லுநர் நிறுவனம் பரிந்துரைக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் போது டைனியா எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாக பரவுவது குறித்து அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (04)...

யாழில் வழிபாட்டுத் தலங்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் கட்டாயமாக பின்பற்றவேண்டிய சுகாதார விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுள்ள கோரோனா தொற்று அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், திருமண மற்றும் ஏனைய வைபவங்களின்போது கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வழிபாட்டு தலங்களுக்கான கோவிட் -19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்...
Ad Widget

கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் குறுகிய காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளமை சிறிய விடயமல்லவென சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்காவிடின், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கடந்த புதன்கிழமையுடன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்திருந்தது. இந்நிலையில் நேற்று...

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் செய்ய வேண்டியது இது தான்!

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் தேவையில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதன் பின்னர், அன்று முதல் 14 நாட்களுக்குப் பின்னர் தாமதிக்காமல் தடுப்பூசியைப்...

சாரதிகளுக்கு 22 புள்ளிகள் வழங்கப்படும் – குற்றங்களினால் பூஜ்ஜிய புள்ளிக்கு வந்தால் சாரதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார். வாகன சாரதிகள்...

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன. இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு...

பொதுமக்கள் தமது பிரச்சினைகளை எனக்கு அறிவித்தால் துரித நடவடிக்கை” – மாவட்ட டிஜஜி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், பொலிஸ் காவலரங்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார். சுகாதார வழிகாட்டுதல்கள்...

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக...

முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எனவே நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தெலைபேசி இலக்கங்களுடன்...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறுவோருக்கு விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலுள்ள சிகிச்சை களத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்கள், தபால் ஊடாக அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார் ஆகவே இன்றிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவில் வைத்திய சேவை பெறும் நோயாளர்கள், தமக்குரிய மருந்துப் பொருட்களை 021- 2214249, 021- 2222261, 021- 2223348...

அரச வைத்தியசாலைகளில் மாதாந்த பரிசோதனைக்கு செல்வோருக்கான அறிவிப்பு!

அரசு மருத்துவமனைகளில் மாதாந்த பரிசோதனைக்கு (கிளினிக் – Clinic) பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளுக்கான வீட்டு விநியோக திட்டம் நெற்று (வியாழக்கிழமை) முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் நடத்தப்படும் மாதாந்த பரிசோதனையில் கலந்துகொள்ள முடியாத நோயாளிகளின் வசதிக்காக சுகாதார அமைச்சகம் மற்றும் தபால் துறை இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. அதன்படி, அரச...

அந்தமான் கடல் பிராந்தியத்தில் சூறாவளி!

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் நேற்று (20) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் அல்லது கடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை...

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலாகும் முழுநேர பயணத்தடை!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதனையடுத்து மீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

கொரோனாவில் இருந்து மீட்சி பெற வைத்தியர் கூறும் அறிவுரை

தற்போது வைரஸ் தொற்றானது யாழ். மாவட்டத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போல் வட மாகாணத்திலும் கொவிட் தாக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது பரவும் வைரஸ் தாக்கத்தினால் 20 தொடக்கம் 60 வயது வரையானோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டவர்களில் 10% ஆனோர் சுவாசிப்பதற்குச் சிரமப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவர்களுக்கு...

நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

நாட்டில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை மீண்டும் அமுல் – பொலிஸார் முக்கிய அறிவிப்பு

பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கின்ற வேளையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியில் செல்லும் நடைமுறை அமுலாகவுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை நடைமுறைக்கு வருகிறது. எனவே அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள்...

மே 18! இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்க அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக...

வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில். “யாழ். மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று அதிகரித்துள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts