வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விபரங்கள் சமர்ப்பிப்பு

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தயாகத்தில் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம்...

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் 30 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை கொள்வனவு செய்ய 30...
Ad Widget

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கடத்தல்!

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக...

முருகன் காவி உடை தரித்த நிவையில் நீதிமன்றத்தில்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் தமிழ் நாட்டின் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வேலூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முருகனிடம் இருந்து கையடக் தொலைபேசிகள் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். கடுமையான...

பலாலி விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளை விடுவிப்பது பற்றி தீர்மானமில்லை

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் தொழில்நுட்பம்!

ணினிகளை நேரடியாக நமது மூளையின் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க முயன்றுவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் ''அமைதியான பேச்சு'' என்ற மென்பொருளை உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்தத் திட்டத்துக்கு, எவ்வித அறுவை சிகிச்சையும்...

திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப்பெண் மரணம்

சமுர்த்தி கூட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கும்போது கர்ப்பிணித் தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த கர்ப்பிணிப்பெண் வீதியில் மயங்கி விழந்ததையடுத்து உறவினர்களும் அயலவர்களும் அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் அதற்கிடையில் அவரது உயிர்பிரிந்துவிட்டது. இறக்கும்போது கர்ப்பவதியாக...

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு...

வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரிப்பு

“நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக பற்றீரியா மற்றும் வைரஸ் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது” என்று, யாழ்.போதனா வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஜமுனாந்தா தகவல் தெரிவித்துள்ளார். நோய் கிருமிகளின் பெருக்கத்தினால் ஏற்படும் ஆஸ்மா, கண்நோய்கள் தொடர்பிலும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும்...

மீதொட்டமுல்ல அனர்த்தம்; குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 50,000 ரூபா!

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல உயர் அச்சுறுத்தல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கே மாதாந்தம் 50,000 ரூபா படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

மீதொட்டமுல்லயில் இறந்தால் மட்டும்தான் உயிர்களா?

“மீதொட்டமுல்லயில் இறந்தால் மட்டும்தான் உயிர்களா? எமது பிள்ளைகளின் உயிர்களைப்பற்றி அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா? பிள்ளைகளை விசாரணைக்காக ஒப்படைக்கும்போது நாங்கள் மட்டும்தானே கண்கண்ட சாட்சிகள்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப்...

உரிமை கொண்டாடிய வழக்கு : தனுஷ்க்கு சாதகமாக தீர்ப்பு

நடிகர் தனுஷை உரிமை கொண்டாடிய வழக்கில் மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர்...

ஏஏஏ இரண்டு பாகமாக மாறியது ஏன்?

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஏஏஏ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களுடன் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஏஏஏ படம் பற்றி புதிய தகவல் வெளியானது. அதாவது,...

மும்பையை கலக்கிய பிரபல தமிழ் தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கிறாரா?

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக...

காக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா நேற்று...

அதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களத்தின் செயற்பாடுகள்: அரச அதிபர்

வனவளத்திணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மாவட்டச்செயலகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச காணிகள் அனைத்தும் தங்களுடைய வனவளத் திணைக்களத்திற்குரியவை என்றும் அதில் எந்த பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் தங்களின் அனுமதியை...

நில மீட்பு போராட்டத்தை கைவிடாதீர் : முதலமைச்சர் ஆலோசனை

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

யாழில் வைத்தியரின் வீட்டின்மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் உடுவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது பெற்றோல் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில்...

யாழ் தேவியில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ் தேவி ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக, பண்டாரிக்குளம் வீதியை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோதே, அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது...
Loading posts...

All posts loaded

No more posts