பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக...

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!

அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் நேற்று பதிவுகளை மேற்கொண்டனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு...
Ad Widget

தையிட்டி பகுதியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிவு!

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். விகாரை அமைப்பு தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் வெதுப்பகங்கள், சீமெந்து தொழிற்சாலைகளில்...

மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்த ஆளுநர் நடவடிக்கை!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பொலிஸ் மற்றும் சிவில் அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்...

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் நேற்று (வியாழக்கிழமை) மூன்றாம் திருவிழா நடைபெற்றது. இதன்போது மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர். குளவிகள் பலருக்கும் கொட்டிய...

மின்னல் தாக்கத்தினால் வான், லொறி தீயில் எரிந்து நாசம்!!!

மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன மின்னல் தாக்கி தீப் பற்றி எரிந்து நாசமாகின. டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பாரவூர்தி முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் சுதன்...

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு!

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் நாட்டில் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்திது உரையாடியபோது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்...

அரச ஊழியர்களுக்கு நேற்று முதல் 2500 ரூபா சம்பள அதிகரிப்பு

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான 2,500 ரூபா கொடுப்பனவு நேற்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருக்கிருக்கின்றது. இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் 2,700 மில்லியனுக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 107 சதவீதத்தால்...

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சம்பந்தன்

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிய அரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து...

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

கிளிநொச்சி – பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக வீதிகளில் செல்லும் பெண்களிடம் தங்கச் நகைகளை அறுத்து செல்லுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(வியாழக்கிழமை) காலை அலுவலக கடமைக்காக சென்று கொண்டிருந்த கிராம அலுவலரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியினை அறுத்துச்சென்றுள்ளனர் குறித்த...

யாழில் மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர், இலங்கைக்கான குவைத் நாட்டுத் தூதுவர், சிங்கப்பூர் சுகாதார சேவை தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து...

முல்லைத்தீவில் இளைஞனுக்கும் யுவதிக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த சஜித் பிரேமதாச!

முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் . குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை அழகாக ஓவியமாக வரைந்து அமைச்சரிடம் கையளித்த முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா...

கடற்படையிடம் கையளித்த தனது மகனைத் தேடியலைந்த தாய் முல்லைத்தீவில் மரணம்!

கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி அலைந்த தாய் ஒருவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார். இவ்வாறு நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார்....

பயங்கரவாதிகளால் ஈஸ்டர் தாக்குதலைப் போன்று 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்!

புத்தளத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பயங்கரவாதிகளுடையவை எனும் பட்சத்தில், அவர்கள் ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார். அத்தோடு உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக்கூடாது என்றும் இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே...

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!!!

நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடன் தொடர்புடையதாக இருவர் கைது!

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே பொலிஸாரால் இன்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி...

வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு – யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் தாம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் இன்று (புதன்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியதுடன் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டையும் பதிவுசெய்தனர். நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளில்...

யாழ் மாநகரசபையின் 5 ஜி திட்டத்திற்கு எதிராக ரிட் மனு தாக்கல்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி...

யாழில் பெற்றோர் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்! – பொலிஸார் எச்சரிக்கை!!

யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சூளுரைத்துள்ளார். யாழ். மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் ஆவாக் குழுவின் உறுப்பினர் என பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர். இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன்...

ஐ.தே.கவின் உயிர்நாடி நான்!ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க சகல தகுதியும் உள்ளது – சஜித்

* அரசியல் சதிப் புரட்சியை முறியடித்தேன். * பிரதமர் ரணிலைக் காப்பாற்றினேன். * ராஜபக்சக்களின் வலையில் சிக்கவில்லை. * கட்சிக்குத் துரோகமிழைக்கவில்லை. * தந்தையின் வழியில் பயணிப்பேன். * ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பேன். * நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுப்பேன். "ஐக்கிய தேசியக் கட்சியின் உயிர்நாடியாக இருக்கும் எனக்கு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க சகல...
Loading posts...

All posts loaded

No more posts