யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!!

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, பண்ணை பாலத்தடியில் நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளையிலேயே தவறி விழுந்து காணாமல்போயுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் சுமார்...

“ஒருவேளை நாடு சில நாட்களுக்கு மூடப்படும்” – ஆளும் கட்சி எம்.பி.

கோவிட் -19 நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் சில நாள்களுக்கு நாடு மூடப்பட வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார தெரிவித்தார். நாட்டில் கடினமான பொருளாதார நிலமை இருந்தபோதிலும், மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க கடினமாக இருந்தாலும் கூட அத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் ஊடகங்களிடம்...
Ad Widget

உடன் பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பியுங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர்

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரித்துள்ளனர். அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுள்ள கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியுமான என்பது கேள்விக்குறியாகவுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலைமைகள் மற்றும் கொவிட்...

டெல்லி செல்லத் தயாராகும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ்த்...

நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால், 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும்!!

கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல் துறை பரிந்துரைத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பரிந்துரை, சோதனைகளை மேற்கோள் காட்டி அத்துறையின் பணிப்பாளர், வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள...

செல்வச்சந்நிதி ஆலய வளாகத்திலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை இனங்கண்டு, அவர்களையும் சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர். தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை திருவிழாவுக்கு முன்னர் பி.சி.ஆர்.பரிசோதனை எடுக்கவேண்டும் என பொதுச்...

கொரோனாவால் மேலும் 94 மரணங்கள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111ஆக...

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உள்பட நாட்டில் பல இடங்களில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் அடையாளம்!!

94 கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரியல் மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனைகளில், 56 பேருக்கு கோரோனா வைரஸின் டெல்டா திரிபு தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொழும்பு, அங்கொட, கடுவெல, நுகேகொட, கல்கிசை, பொரலஸ்கமுவ, மஹரகம, பிலியந்தல, கஹதுடுவ,...

தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு சீல்!!

அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கியதால் சந்திநிதியான் ஆச்சிரம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு இன்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்திநிதி ஆலயம் வருடாந்திர பெருந்திருவிழா இன்று ஆரம்பமானது. சுகாதாரக்...

அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பாக புதிய சுற்றுநிருபம்!!

அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பாக புதிய சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அரச நிறுவனங்களின் பிரதானிகளினது...

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழப்பு!! நாட்டில் 94 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த (67 வயது) ஆண் ஒருவரும் புங்குடுதீவையை சேர்ந்த (71 வயது) பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றினால்...

இலங்கையில் மீண்டும் முடக்கம்? – முக்கிய தீர்மானம் இன்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், தினசரி இறப்புகள் உச்சத்தை எட்டியுள்ளதால், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக...

கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது!!

கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். நாட்டில் டெல்டா கொவிட் திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிறது என்பது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். அதன்படி,...

வைத்தியசாலைகள், பொது இடங்களுக்கு செல்வோருக்கு தடுப்பூசி பெற்றிருப்பது இனிமேல் அவசியப்படலாம்!!!

இனிமேல் வைத்தியசாலைகளுக்கும், பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்கும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது கட்டாயமாக்கப்படலாம். எனவே வடக்கு மாகாணத்தில் இதுவரை கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு

கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த எச்சங்களை பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பொலிஸார்...

பூஞ்சை தோல் நோய் பரவும் அபாயம்; மருத்துவ ஆலோசனையைப் பெற பரிந்துரை

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்ப உறுப்பினருக்கு தோல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு தோல் மருத்துவ வல்லுநர் நிறுவனம் பரிந்துரைக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் போது டைனியா எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாக பரவுவது குறித்து அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (04)...

11 இளைஞர்கள் கடத்தல் ; சட்டமா அதிபர் திணைக்களம் முடிவை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய -பசிபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா சட்டமா அதிபர் திணைக்களத்தின் இந்த...

வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்....

கொரோனாவால் சீனாவைவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு – மேலும் 82 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும்...
Loading posts...

All posts loaded

No more posts