சமையல் எரிவாயு விலையை மீள அதிகரிக்க வேண்டிவரும்!!

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் எரிவாயு விலை வேகமாக அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே லசந்த...

3 முதல் 12 வயதுடையவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கலாமா? – ஆராய்கிறது சுகாதார அமைச்சு

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அலகு வழங்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், மருத்துவ வல்லுநர் ஷியாமன் ராஜீந்திரன் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுவரும் தடுப்பூசியால் கடுமையான...
Ad Widget

சந்தேக நபர்கள் தப்பிக்க சுன்னாகம் பொலிஸார் உதவி; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ஏழாலை பிரதேசத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் வேண்டும்மென்றெ தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ்...

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரத்து 778ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 326 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு...

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா். புதுவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக இலங்கையில் இருந்து அமைச்சா்களும் தூதுவா்களும் ஏற்கெனவே புதுவைக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்...

யாழில் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள் பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு!

ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக...

கீரிமலை கடலில் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

கீரிமலை கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டரை மணிநேர தேடலின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்தியெட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு சென்ற இளைஞன் உறவினர்களுடன் கடலில் குளித்த வேளை இச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சீவன் (வயது-18) என்பவரே மரணமடைந்துள்ளார். https://www.jaffnajournal.com/archives/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3.html

கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் இன்று (புதன்கிழமை) நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல்...

வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கக் கோரியும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் உலக ஆசிரியர் தினமான இன்று நாடுமுழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றன. ஆசிரியர் மற்றும் அதிபர் இணைந்த தொழிற்சங்கங்களினால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று முற்பகல் 10 மணியளவில் வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய...

காத்தான்குடியைச் சேர்ந்தவர் அச்சுவேலியில் சடலமாக மீட்பு!!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாச கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் அறையிலிருந்து...

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த...

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டமளிப்பு வியாழன்று நிகழ்நிலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் நாளை வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கோரோனாப் பெருந்தொற்று...

நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதை செய்து கொள்ளையிட்ட இருவர் சிக்கினர்

நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் வீடொன்றில் 32 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கைநேற்று முன்னேடுக்கப்பட்டது. நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு திங்கள் முதல் தடுப்பூசி!

20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அருகிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்று இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கொரோனா உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் – ஆலோசனைப் பெற விசேட இலக்கம்

கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சந்தோசமின்மை, அதிகரித்த கோபம், உணவின் மீதான நாட்டமின்மை, நித்திரையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அந்தச் சங்கத்தின் மனநல விசேட வைத்தியர் சஜிவன அமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிகுறிகளானது, நாளடைவில் மன அழுத்தமாக மாறக்கூடும் என...

யாழ். இராசாவின் தோட்ட வீதி மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் இராசாவின் வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில் , இராசாவின் வீதியின் குறுக்காக வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , குறித்த...

21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!!

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5...

நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நாவற்குழி நகரத்தின் அபிவிருத்தி பணிகள், உத்தியோகபூர்வமாக திட்டத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவுக்கமைய இன்று...

நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது!!

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்ததன்மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணியளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 36...
Loading posts...

All posts loaded

No more posts