மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போதே இந்த விடயம்...

ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த ஆபத்து தெரியப்படுத்தப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்

சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்ற பொழுது அவரது செயல்கள் எந்த அளவு பிழை என்பதை சுட்டிக்காட்டி மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்ட மாதிரியான ஒரு நிலைமையை இந்த ஊரிலே இந்தத் துரோகச் செயலைச் செய்து வீட்டுக்குபோக முடியாத நிலையை நீங்கள் உருவாக்காமல் அவர்களது துரோகச் செயலை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது என தமிழ்த் தேசிய மக்கள்...
Ad Widget

ரயிலுடன் மோதி மாணவன் சாவு!!

சாவகச்சேரியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையைக் கடக்க முற்பட்ட மாணவன் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இரட்டையர்களில் ஒருவர் தொடருந்துப் பாதையை கடந்த நிலையில் பின்னால் சென்ற மற்றையவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த உத்தரதேவி தொடருந்துடன் மோதியே நேற்று இரவு 6.45 மணியளவில் சாவகச்சேரி இந்துக்...

மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மோதியதில் ஒருவர் பலி!!

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார். சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச்...

கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் வீட்டு வளவுக்குள் புகுந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டதுடன் பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய்...

3 டோஸ்களையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் – சுகாதார அமைச்சு

நாட்டில் இனிவரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு – மக்களே அவதானம்

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு...

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள்...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் 14 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 877 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 2 ஆயிரத்து 763ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 324 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு...

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய வகுப்பறைகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

பாடசாலை சென்ற மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய பேருந்து!!

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (24) காலை 7.00 மணியளவில் நீர்வேலி பூதவராயர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்...

பஸ்களில் நின்று பயணிப்போருக்கு புதிய கட்டணம்!!

பேருந்துகளில் ஆசனங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு வேறொரு கட்டணமும் அறவிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆசன எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அமர்ந்திருக்கும்...

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட...

நாட்டில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம் : ஒரு வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள்

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 87 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டும் சுகாதார தரப்பினர் நாட்டில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத்துறைக்காக நாடு திறக்கப்பட்டுள்ளமை அச்சுறுத்தல் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக...

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்!

கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும். அந்நிகழ்வில் கலந்து...

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்!! நாளை முதல் 2 மணிநேரமும் மின் துண்டிப்பு!!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியேற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை மேலும் நீடித்து, மழைவீழ்ச்சியும்...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரிடையேயும் கொரோனா தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்...

நாட்டில் 4 மணித்தியால மின்தடை?

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் நாளாந்தம் மின்தடையினை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் எரிசக்தி...

தமிழர்கள் வழங்கிய ஆணை ராஜபக்ஷர்களுக்கு கிடைத்த ஆணையை விட மேலானது – கஜேந்திரகுமார்

தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர்கள் தமக்கு வழங்கிய ஆணை, அரசாங்கம் பெற்ற ஆணையைவிட மேலானது என நாடாளுமன்ற உறுப்பினார்ட் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இதனை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் ஆணையை மீறி கொள்கையை வெளியில் வைத்துவிட்டு வரத்தயாரில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார். 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சியமைத்த...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் யாழில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி, மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரையும் கையளித்திருந்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts