- Tuesday
- July 7th, 2026
சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்தப் பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதில் அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர். இந்த நிலையிலேயே, மொறவக்க பிரதேசத்துக்கு உட்பட்ட இப்பொருளின்...
யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பொது நோக்கு மண்டபத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் , மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அழைத்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பான பொதுவான கருத்தை எட்டுவது பற்றி விவாதிக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தை இன்று மதியம் இரா.சம்பந்தனின் உறவினர் வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
பொது போக்குவரத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைய வாரங்களில் ரயில் தாமதங்கள் அவதானிக்கப்படுவதாகவும் எனவே இந்தக் காரணியை கவனத்தில்கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம்...
வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலியான பதிவு முத்திரைகளை பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யும் போது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இரு பெண்களின் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்ட பாதுகாப்பு முத்திரை பொய்யாக...
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிள் ஓடிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மறித்த போது, பொலிஸாரின் சமிஞையை மீறி இளைஞன்...
கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில்...
ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் நான்கு மாணவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி கிழக்கு, கலாசாலை வீதியில் கடந்த 21 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிரேஷ்ட மாணவர்களுக்கும், புது முக மாணவர்களுக்குமிடையில் கைகலப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது....
இனிவரும் காலங்களில் பொலிஸார் தாக்கினால் தாமும் திருப்பி தாக்குவோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டமையால் எமது நீதிக்கான போராட்டம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்றும் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக...
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய...
யாழில் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்குள் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஒருவலை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதன்போதே சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த சந்தேகநபரை கைது செய்யக்கோரி இன்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் பணி...
நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய்...
உக்ரைன் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுள்ளது. சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...
உக்ரைனுக்கு ஆதரவாக முதல் முறையாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இந்த ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்”( Sea King) ஹெலிகாப்டர்களை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், AFU 10,000...
மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வீதிச்சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம் எதிர்வரும் 26ஆம் திகதியும் மாவீரர் நாள் மறுநாள் 27ஆம்...
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று (புதன்கிழமை) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு...
யாழ்.செம்மணி வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களை கற்கள், மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி அப்பகுதியை மேடாக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது. குறித்த நீரேந்து பிரதேசத்தினை மேடாக்கும் நடவடிக்கையால் , அயலில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்பதனால் வயல்கள் அழிவடையும் நிலைமை காணப்படுகிறது. ஏற்கனவே அப்பகுதிகளை விஷமிகள் குப்பைகளையும்,...
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனையும், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனையும் சந்தித்துள்ளார். இதன்போது யாழ் மாநகர சபை அலுவலகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
Loading posts...
All posts loaded
No more posts
