- Tuesday
- March 3rd, 2026
பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுத்தினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகவோ அல்லது பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)
யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் படையினரை அனுப்பியது யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதற்கு உயர்கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். (more…)
பொன்னாலை - திருவடிநிலையில் இரண்டு கிலோ மீற்றர் நீளமான கடற்கரை பிரதேசம் கடற்படையினரால் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, கடற்றொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாகவுள்ள சிறியளவு கரையோரப் பகுதியிலும் கடற்றொழிலில் ஈடுபடக்கூடாதென கடற்படையினர் உத்தரவிட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். (more…)
இலங்கையின் வடக்கில் இருந்து படையினர் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (more…)
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டித்து ஊழியர் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த 27ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கெண்டதைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்கள் அரைநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். (more…)
38ஆவது தேசிய மெய்வல்லுனர் விளையாட்டு விழா எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மூன்று தினங்களாக கொழும்பு சுகதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள சுதந்திர ஊடகக் குரல் இந்த நடவடிக்கை ஐனநாயக விரோத நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளது. (more…)
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். (more…)
உதயன் ஆசிரியரைத் தாக்கியவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது. (more…)
வடமாகாணத்திலேயே கூடுதலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றன என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். (more…)
தொற்றுநோய் அல்லாத நோய்களினால் இறப்புக்கள் அதிகரிப்பதாக புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார்.மருத்துவ சங்கத்தின் மாநாடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. (more…)
மாவீரர் நாளினை மையமாக கொண்டு யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் மீது சிறிலங்கா அரச படைகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தொடர்பில் ஐ.நா உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைத்தீவுக்கு அவசரமாக செல்ல வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது. (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.புலனாய்வுப்பிரிவினர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில், ஸ்ரீடெலோ காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலுள்ள காரியாலயம் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல், உதயன் ஆசிரியர் மீதான தாக்குதல், மற்றும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் என்பன வடக்கில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. (more…)
யாழ். குடாவில் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் சர்வாலய தீபத்தினை ஏற்றவிடாது இராணுத்தினரும் புலனாய்வாளர்களும் மிரட்டியதுடன் மக்களால் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபங்களை எடுத்து வீசியதாகவும் தெரியவருகின்றது. (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts



