Ad Widget

யாழ். பல்கலைக்கழக இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை

jaffna-universityவெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை அடுத்து மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts