கைதான யாழ். பல்கலை மாணவர்களில் இருவர் விடுவிப்பு

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். (more…)

ஒரு மில்லியன் ரூபா செவவில்’யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு’ மீள் நிர்மானம்

ஏ9 வீதி யின் செம்மணிப்பகுதியில் அபிவிருத்திப் பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் மீண்டும் அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. (more…)
Ad Widget

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி, 5 வருடங்களை சிறையில் கழித்தவர் நிரபராதி என்று நேற்று விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப் பட்டு யாழ்.மேல் நீதிமன்றினால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். (more…)

நெடுந்தீவில் இளைஞன் மீது வாள் வெட்டு

நெடுந்தீவு பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டினை மேற்கொண்டதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கொக்குவில் பொற்பதி வீதியில் சித்த வைத்தியர் சடலமாக மீட்பு

கொக்குவில் பொற்பதி வீதியில் வசித்து வந்த சித்த வைத்தியர் நேற்று திங்கட்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதான துரைசாமி ஜெயரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

இராணுவ வீரர்கள் மீது கைக்குண்டு தாக்குதல்; இருவர் நிரபராதி என விடுதலை

இராணுவ வீரர்கள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டு கைதுசெய்யப்பட்ட இருவர் நிரபராதி என யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. (more…)

யாழ். பல்கலையில் வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் குறித்த கருத்துப்பட்டறை

பாக்கு நீரிநிணையில் இந்திய இலுவைப் படகுகளின் செயற்பாட்டினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்த கருத்துப்பட்டறை திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

தனியார் பேருந்துடன் இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் மூவர் படுகாயம்

தனியார் பேருந்துடன் இராணுவத்தினரின் பேருந்து மோதியதில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

வறுமை ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் வறுமை ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஞாயிறு காலை 9 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது: யாழ். அரச அதிபர்

பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது என்று யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

துப்பாக்கி சூட்டில் இராணுவ வீராங்கனை காயம்

யாழ்ப்பாணம், அச்செழு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவ வீராங்கனை ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ். பல்கலை மாணவர்களில் பவானந்தன்,சொலமன் ஆகிய இருவரும் இன்று விடுதலை?

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்த மையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை உயர்வு

யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த பருவமழை காலத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் மரக்கறிகளைப் பயிரிடுவதில் நாட்டம் குறைந்துள்ளது. (more…)

இந்தியன் வங்கியின் 2ஆம் ஆண்டினை முன்னிட்டு மாதிரிக் கிராமமாக வட்டு வடக்கு தெரிவு

இந்தியன் வங்கியின் யாழ்.கிளையின் இரண்டாம் ஆண்டினை முன்னிட்டு ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வங்கியில் அதற்காக நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. (more…)

எதிர்வரும் காலங்களில் சைக்கிள்களுக்கும் கண்ணாடி

பக்க கண்ணாடி பொருத்தாது சைக்கிள்களைச் செலுத்திச் செல்லுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் படுகாயம்

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

போதைப் பொருள் பாவனையிலிருந்து இளையோர் விடுவிக்கப்பட வேண்டும்!

மதுபானம், போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தினரை விடுவிக்க கலாசார நிகழ்வுகள் ஊடாக அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும். (more…)

உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டவிதிகள் குறித்த செயலமர்வு

உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் சபைக் கூட்டங்கள் தொடர்பிலான சட்ட விதிகள் பற்றிய செயலமர்வு ஒன்றை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. (more…)

பல்கலை மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கவே சதி செய்கிறது அரசு – மனோகணேசன்

பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலி முத்திரை குத்தி அவர்களைப் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பதை மஹிந்த அரசு இன்னமும் கைவிடவில்லை. (more…)

முன்னாள் போராளிகள் 1200 பேரைத் தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர்!

இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts