- Thursday
- March 12th, 2026
500 500 ரூபா போலி நாணயத்தாள் கொடுத்து எரிபொருள் நிரப்ப முயன்ற குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர்கள் மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்.நகரில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. (more…)
வடமாகாணத்தில் அழகியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழகியற் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரசுக்கு நன்றி செலுத்தும் முகமாக யாழில் நடைபெறவுள்ள இலக்கிய சந்திப்பினை தமிழ், மலையக, முஸ்லீம் படைப்பாளிகளை புறக்கணிக்குமாறு (more…)
வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்' என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றகுழு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)
வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் 51 வீதமான வாக்காளர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
சுண்டுக்குழி மகளீர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவின் சிறப்பு ஏற்பாடாக பாடசாலை பழைய மாணவிகளின் நடைபவணி நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)
மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்த வாக்களிப்பு நிலையங்களிலும் சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. (more…)
கிழக்கில் இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்படுகின்றது என அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார். (more…)
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)
வடக்கு மாகாண சபைக்கான முலாவது கட்டுப் பணம் நேற்று சுயேட்சைக் குழுவொன்றினால் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
இலங்கை தீவின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும், ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும், வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும். (more…)
அனுமதி பத்திரம் இன்றி இரண்டு உழவு இயந்திரத்தில் மண் ஏற்றிகொண்டு வந்த இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் நீதவான் குறித்த இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்தார். (more…)
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில் ஐ.தே.க வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தில் லீசிங்க் நிறுவனத்தினர் என்ற பேர்வழியில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு பொலிஸாரின் உதவியுடன் மீண்டும் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. (more…)
சுற்றுலா விஸாவில் வந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் ஆகில இலங்கை இந்து மா மன்றமும் இணைந்து நடத்தும் சுவாமி 'விபுலானந்தர் விழா' நேற்று திங்கட்கிழமை யாழில் நடைபெற்றது. (more…)
மஹிந்த சிந்தனையின் கல்வி விரிவாக்கற் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடவிதானம் வட மாகாணத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி யாழ்.குடாநாட்டில் தேவையற்ற அநாகரிகமான செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
