Ad Widget

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயம்

accidentயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.

தெல்லிப்பழை சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மீது முச்சக்கரவண்டியொன்று மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பன்னாலை, பருத்தியோலையைச் சேர்ந்த பிரசன்னா சந்திரராணி (வயது 26) என்பவரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஆசிரியரொருவரும் மாணவியொருவரும் காயமடைந்துள்ளனர். இவ்விரு விபத்துக்களும் சுன்னாகம் – காங்கேசன்துறை வீதி ஜெற்மோட்டடோர்ஸ் ஒழுங்கைக்கு அருகிலேயே இடம்பெற்றன.

முன்னால் சென்ற ஆசிரியரொருவரின் மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதால் இவ் ஆசிரியர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விஞ்ஞானப் பாடநெநி ஆசிரியரான எஸ்.சேதுநாதன் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இதேவேளை, மற்றைய விபத்தில் வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இம்மாணவி படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.தனியார் வகுப்பு முடிவடைந்து சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றது.மல்லாகம் மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவியான குலேந்திரா தர்சினி (வயது 17) என்பவரே படுகாயமடைந்தார்.

இவ்விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts