உலர் உணவு மோசடி, விசாரணை நடத்துமாறு மாகாண சபையில் திர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் உணவு வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் வெளிப்படையான முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் மீள்குடியேற்றம் 98 சதவீதம் பூர்த்தி – பாதுகாப்பு செயளாளர்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வட மாகாணத்தில் 95 - 98 சதவீத மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)
Ad Widget

வடக்கின் போரில் சென்.ஜோன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

யாழ். மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற 108 வது வடக்கின் பெருஞ் சமர் முடிவின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி பெற்றதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

விவசாய அமைச்சினால் பொருட்கள் அன்பளிப்பு

வடமாகாண விவசாய அமைச்சருக்கு நடப்பு ஆண்டுக்கென ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து (more…)

யாழ். மாவட்டத்தில் வேம்படி முன்னிலையில்

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. (more…)

வலி.வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்தினை எதிர்த்து கண்டனப் போராட்டம்

வலி.வடக்கு பிரதேச சபையில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவினர் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு முன்னால் (more…)

கூட்டுறவு நிறுவனத்தினரையும், மாநகர சபையையும் எதிர்த்து உண்ணா விரதப் போரட்டம்

யாழ்.வர்த்தகர்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரும் வர்த்தகர்களும் இணைந்து உண்ணா விரதப் போரட்டத்தை முன்னெடுத்தனர். (more…)

யாழில் நேபாளக்குழு

நேபாள நாட்டின் சமாதானத்திற்கும்,மீள்கட்டுமானத்திற்குமான 9பேர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் வருகை தந்தனர். (more…)

கமல் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் (more…)

கரையோரப் பகுதிகளில் புதிய காவலரண்கள், மக்கள் பீதியில்!

தீவகத்தின் கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களுக்கு அண்மையில் அவசர அவசரமாக காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் கடற்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர். (more…)

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம். (more…)

நுளம்பு ஒழிப்பு செயற்பாடுகள் குடாநாட்டில் நேற்று ஆரம்பம்

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வார செயற்பாடுகள் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. (more…)

“முதலமைச்சர் சி.வி எனக்கு தம்பி” – பிள்ளையான்

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை' (more…)

பொது சுகாதார பரிசோதகர்களை உடனடியாக பிரதேச சபைகளுக்கு விடுவிக்கவும் – முதலமைச்சர்

பிரதேச சபைகளிலிருந்து சுகாதாரத் திணைக்களத்திற்கு மீளப்பெறப்பட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை உடனடியாக அந்தந்த பிரதேச சபைகளுக்கே விடுவிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டார். (more…)

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன் சிலை திறப்பு

கோப்பாயினைச் சேர்ந்த ஒருவரினால் 300,000 ரூபா செலவில் யாழ். கல்வியங்காட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரனின்  6 அடி உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. (more…)

பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதர்ப்பு தெரிவித்து அரச தாதியர் சங்கத்தின் தாய்ச் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (more…)

தகவல் தந்தால் ஒரு மில்லியன் சன்மானம்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோபி, தெனியன் மற்றும் அப்பன் ஆகிய மூவர் தொடர்பில் தகவல் தருமாறு கோரி யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நியமனம்

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 5 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வடக்கில் இன்னும் 82 கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள்

வடக்கில் இன்னும் 82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

ஏப்ரல் 15 பொது மற்றும் வங்கி விடுமுறை

ஏப்ரல் 15 பொது மற்று வங்கி விடுமுறையாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவல்கள் அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts