- Saturday
- September 13th, 2025

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை பேற்றிற்காக...

மேற்கு ஆபிரிக்காவின் கேப்வேர்ட்டின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 60 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் உட்பட 38 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது. செனெகல் சியாரோ லியோனை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் குறிப்பிட்ட படகில் பயணித்துள்ளனர் – ஒரு மாதகாலமாக இந்த படகு கடலில் காணப்பட்டுள்ளது என தகவல்கள்...

உக்ரைனில் உள்ள Danube நதித்துறைமுகத்தில் உள்ள முக்கிய தானியக்கிடங்குகள் மீது ரஷ்யா நேற்றிரவு வான்வெளித்தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றிரவு, இரண்டு முறை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஒடிஷா பகுதி கவர்னரான Oleh Kiper தெரிவித்துள்ளார். தானியக்கிடங்குகளின் கூரைகள் தாக்குதலில் சேதமடைந்துள்ளதைக் காட்டும் படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த தாக்குதலில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம் ,மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வினைப்...

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஓகஸ்ட் 28ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும்...

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில் ”எமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி செயலிழந்துள்ளமையினால் தண்ணீர் வசதியின்றித் தவித்து வருவதாகவும், இதனையடுத்து சிறிய ரக...

பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலை பொங்கலை குழப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள...

நான் அறிந்த வகையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,''2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த...

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய போர் 500 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் இராணுவ வளங்கள் ஏறத்தாழ தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், "மேற்கு நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பா) ஆயுத உதவி இருந்தபோதும் உக்ரைனால்...

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி...

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு...

ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நேற்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு...

யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேற்றையதினம் (10.08.2023) ஆறுகால் மடப்பகுதியில் இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீட்டுக் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப...

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அதன் அதிகபட்ச கொள்ளளவை மின்சாரத்திற்கு பயன்படுத்தினால் அதன் உற்பத்தி திறன் 30 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்ட உயரம் கடல் மட்டத்திலிருந்து 438 மீட்டர் ஆகும். ஆனால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால், தற்போது நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம்...

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள கலுகா பகுதியிலும், மற்றொரு ட்ரோன் மாஸ்கோவின் முக்கிய சுற்றுச் சாலைக்கு அருகிலும் அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகா் மாஸ்கோவின் புகா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் நேற்றுமுன்தினம் (09.08.2023)...

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (08) ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த மாணவனின் முகத்தில் ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார் எனவும் இதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்...

காங்கேசன்துறை சீமெந்துதொழிற்சாலையில் இரும்புகள் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் தான் எந்தவேளையிலும் பொலிஸாரிடம் சரணடைய தயார் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நான் சிஐடியின் முன்னிலையில் செல்வேன் அதன் காரணமாக பொலிஸார் என்னை கைதுசெய்யலாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கைதுசெய்வதற்கு சபாநாயகரின் அனுமதி தேவை என்பதால் அதனை வழங்குமாறு சபாநாயகரை...

பிரமிட் திட்டங்கள் இலங்கையில் சட்ட விரோதமானவை என்றும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்றல் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி 8 பிரமிட் திட்டங்கள் பற்றி ஊடகங்கள் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது ” யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...

கிழக்கு உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இரண்டு ஏவுகணைகள் நகரத்தைத் தாக்கியுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். என அறிவிக்கப்பட்டுள்ளது. பொக்ரோவ்ஸ்க்...

All posts loaded
No more posts