Ad Widget

8 வருடங்களின் பின்னர் வடக்கு அதிபர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை அதிபர் சேவையில் வடமாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இன்று வடமாகாண கல்வியமைச்சின் செயலகத்திலும் யாழ். வலையக்கல்வி அலுவலகத்திலும் நடைபெற்று வருகின்றது.

saththiyaseelan

அண்மையில் வெளியாகியிருந்த புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம் அதிபர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்காண சரியான அறிவுறுத்தல்களும் தெளிவூட்டல்களும் இந்த பிரமான குறிப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வடமாகாணத்தில் பதவி உயர்வு வழங்கப்படவேண்டிய ஆதிபர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று மத்திய கல்வியமைச்சும், வடமாகாண கல்வி அமைச்சும் இணைந்து நடத்துவதாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

Related Posts