Ad Widget

4 பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக்கின் மொசூல் நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் 4 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளனர்.

ISIS-thugs-rape-women-for-cheating-on-husbands

தங்களது வீரர்களால் கற்பழிக்கப்பட்ட அந்த பெண்களை ஷரியா நீதிமன்றத்தின் முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் அப்பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக விசாரித்த ஷிரியா நீதிமன்ற தலைவர்கள் அப்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்யும்படி தீர்ப்பு வழங்கினர்.இதனையடுத்து திரளாக திரண்டிருந்த மக்கள் முன்பாக நான்கு பெண்களும் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர்.

கடந்த சில நாட்களாகவே , ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள சிரியா, ஈராக், மற்றும் தலிபான் தீவிரவாதிகள் வசமுள்ள ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கல்லால் அடித்து கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Posts