30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதன்பிறகு நாடு முழுமையாகத் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கோவிட் -19 தடுப்பூசி போடப்படாத நபர்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசெல குணவர்தன தெரிவித்தார்.