Ad Widget

27,603 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகினர்!

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியாகியுள்ள நிலையில், 27,603 மாணவர்கள், இவ்வருடம், பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி www.ugc.ac.lk அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்தினூடாக மாணவர்கள் தமது வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ugc என டைப் செய்து இடைவௌி விட்டு சுட்டிலக்கத்தை பதிவு செய்து 1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தில் கூறப்பட்டுள்ளது. (ugc சுட்டிலக்கம் – உதாரணம்: ugc 2223322)

கடந்த ஆண்டை விட இது 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts