- Monday
- June 1st, 2026
யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில், புதிதாக அமையப்பெற்று வரும் மாநகர சபை கட்டடத்திற்கு அருகில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க ஆதனமொன்று, வெளிப்படுத்தல்...
அரச வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியை (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்க விடுமுறையாக அறிவித்து பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளார். 2026.03.30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, 2026.05.27 ஆம் திகதி முதல் 2026.06.02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது....
இடைநிறுத்தப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலை தற்காலிகமாக பழைய முறையில் நடத்துவதற்கும், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அரசியல் கட்சிகள் சுயமாக தீர்மானம் எடுக்க அனுமதிப்பதற்கும் அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெறும் நோக்கில் இன்று (26) செவ்வாய்க்கிழமை பெப்ரல்...
எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் (CPSTL) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர்...
தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில்... "கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக் காலத்தில் தன்சல் வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும்...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்றைய தினம்(25) உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,...
பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பலாலி பொலிசாரால் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த 2025...
புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சேவைத் தளத்தின் கீழ் பொதுமக்கள் இனி வீட்டில் இருந்தவாறு Smartphone ஊடாக சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களில் பதிவு செய்துகொள்ள முடியும் என்று சமூகப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. www.socialsecurity.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சமூகப் பாதுகாப்பு சேவைகளை மிகவும் திறமையாகவும் வசதியாகவும் அணுகுவதற்கு வசதிகளை வழங்குவதே இந்த டிஜிட்டல் மயமாக்கலின்...
மூளைக்காய்ச்சல் அல்லது மெனின்ஜைடிஸ் எனும் வைரஸ் நோய் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 63 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 32 பேருக்கு இந்நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபெம தெரிவித்தார். நோய் பரவல் தொடர்பில் திங்கட்கிழமை (25) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்...
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை முடிவுகள்...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை குற்றவாளி ஒருவர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு...
இந்திய - இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அண்மையில்...
நாவாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கனவனது தாயார் அவரை ஏற்கவில்லை. பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார்....
வடக்கு - கிழக்கு மக்கள் எந்த வித இடையூறுமின்றி தமது உறவுகளுக்காக நினைவஞ்சலிகளை மேற்கொண்டனர். அதற்காக அந்த மக்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தி எம்.பி ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை...
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (19) ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக்...
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட...
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம் எனவும், கடல் கடந்து வாழும் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர், முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் மறக்க முடியாதவை என்றும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன்...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் 17ஆவது ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 10.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. இறுதிப் போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு - வற்றாப்பளையைச்...
Loading posts...
All posts loaded
No more posts
