Ad Widget

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை , திடீர் சுகவீனமுற்றுள்ளார் என யாழ்.போதனா வைத்திய சாலையில் , அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி...

சீன மக்களின் நன்கொடை யாழ். மக்களுக்கு வழங்கப்பட்டது!

சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில், யாழ்ப்பாண மக்களுக்கான நிவாரண பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ் மாவட்டத்தில் 1320 பயனாளிகள் தெரிவு...
Ad Widget

பொதுமக்களால் மீட்கப்பட்ட மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை!

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள்...

153 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். 151 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருந்தாலும், தற்போது அந்த எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன்: அமைச்சர் டக்ளஸ்

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியளாரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் கைது

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த போது 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் அதில் இருந்துள்ளனர் மற்றைய டிரக்கில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும்...

75ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதற்கு பின்னராக...

விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக 30, 31 ஆம் திகதி பிரகடனம்!

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மொத்தம் 75,434 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 2021 இல் பதிவான எண்ணிக்கையை விட...

வியட்நாம் கடற்பகுதியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு

வியட்நாம் கடற்பகுதியில் சிக்கியிருந்த 152 இலங்கையர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் நேற்று (27) இரவு விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வியட்நாம் கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, ​​படகு மூலம் நாட்டை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோர்...

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக கே.மகேசன் நியமனம்!

08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்...

இலங்கையில் மீண்டும் கொரோனா மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நேற்று (திங்கட்கிழமை) இந்த கொரோனா மரணங்கள் நிகழ்வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும்...

தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டி – இன்னும் தீர்மானம் இல்லை என்கின்றார் சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில்...

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

வட்ஸ்அப் (whatsapp) செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது. அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு...

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு: ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு...

முல்லைத்தீவு-கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இடம்பெற்றுள்ளது. இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம் உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத்...

யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸனுக்கு இடமாற்றம்?

யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமைச்சு ஒன்றின் செயலாளராக அவர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், அவருடைய இடத்திற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமத ரூபாவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலராக வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாழமுக்கம் இலங்கை கரையை கடந்து செல்வதாக தெரிவிப்பு!

நாட்டின் மேற்கு திசையில் வலுப்பெற்ற தாழமுக்கம், இலங்கை கரையை கடந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சபரகமுவ, வட மேல் மாகாணங்களில் இன்று(செவ்வாய்கிழமை)...

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அமுலாகும் புதிய நடைமுறை

28 இலட்சம் பேர் அங்கத்துவம் வகிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புத் தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்லைன் ஊடாக மட்டுமே பரிமாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்....

மீண்டும் இன்று முதல் மின்வெட்டு! வழங்கப்பட்டது அனுமதி

நத்தார் பண்டிகை காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்வெட்டினை நடைமுறைப்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் (27.12.2022) முதல் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்த மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என...

எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறையலாம் !

உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டில் எரிபொருளுக்கான நாளாந்த தேவை குறைந்துள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts