Ad Widget

வீட்டில் இருந்தே கடலுணவுகளை பெற்றுக் கொள்ளவதற்கான வசதி!

பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன்விற்பனை நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். அதனடிப்படையில் PICME ஊடாக இலங்கை கடற்றொழில்...

தையல் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு! ஓரிரு நாட்களில் 10 இக்கும் ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள்!!

பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பாலகுமார் எனும் 44 வயதுடைய நபரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்...
Ad Widget

சீன ஆய்வுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது!

சீன இராணுவத்தின் ஆய்வுக்கப்பலான யுவான் வாங் 5 (Yuan Wang 5) இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. செய்மதிகளைக் கண்காணிக்கக்கூடிய இக்கப்பல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டைக்கு வரவிருந்தது. எனினும் இதன் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரியிருந்தது. ‘ யுவான் வாங் 5’ கப்பலானது 750 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!!

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். இதன்படி, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில்...

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும். இதனால் விசேடமாக அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய...

இன்று முதல் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு!!

இன்று முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A முதல் W வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5...

மருந்து தட்டுப்பாடு தொடர்ந்தால் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் 200 க்கும் அதிக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு தொடர்ந்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் நாடு மோசமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல...

யாழில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட பரபரப்பு!! நான்கு பேர் கைது!!

காங்கேசன்துறையில் இருந்து காலி நோக்கி பயணித்த மஹவ ரயிலில் மோதலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கசந்துறையிலிருந்து காலி நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிய மூவர், ரயில் இருக்கை தொடர்பில் நபருடன் தகராறு செய்துள்ளனர். மேலும் குடிபோதையில் ரயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ​​ரயிலில் இருந்த மற்றொரு நபர் அவர்களை...

எல்லை மீறிச் சென்ற பிரித்தானிய விமானம் – விரட்டி அடித்த ரஷ்ய போர் விமானம்!

பிரித்தானிய விமானம் ஒன்று ரஷ்ய வான்வெளியை மீறிச் சென்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் ஒன்று பிரித்தானிய விமானத்தை ரஷ்ய வான்வெளியில் இருந்து வெளியேற்றியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேரண்ட்ஸ் கடலுக்கும் வெள்ளைக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள கேப் ஸ்வியாடோய் நோஸ் அருகே ரஷ்ய விமான எல்லையை பிரித்தானிய உளவு விமானம்...