Ad Widget

அமெரிக்க வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு!!! 4 பேர் பலி!!

அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில் வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 மாடிகளைக் கொண்ட வைத்தியசாலைக்குள் புகுந்த மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் கொலையாளி கொல்லப்பட்டுள்ளார். தம்பதி உள்பட 4 பேர் சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்....

எரிபொருள்களின் கையிருப்பு தொடர்பாக அமைச்சரின் கருத்து

இலங்கையில் தற்போது கிடைக்கப்பெறும் எரிபொருளின் கையிருப்பு தொடர்பான விபரத்தை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இதன்படி எரிபொருள் கையிருப்பு பின்வருமாறு: டீசல் – 18,825 MT சூப்பர் டீசல் – 42...
Ad Widget

வவுனியாவில் இளைஞன் மாயம்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றய தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா...

இறக்குமதியாகும் பொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் 15-200 சதவீதம் வரை உயர்வடைகின்றன!!!

நேற்று இரவு முதல் புதிய சிறப்புப் பொருள்கள் வரி விதிப்பின் கீழ் அனைத்து இறக்குமதிகளின் விலைகளும் 15 முதல் 200 சதவீதம் வரை உயரும் என்று நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்கள் மீதான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. வளிச்சீராக்கிகள் (A/C), சலவை இயந்திரங்கள், ரைஸ்...

திங்கள் முதல் பணிப்பகிஷ்கரிப்பு – தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிடுகையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு...

லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் 414 இடங்களில் விநியோகம் – விபரம் இதோ !

லிட்ரோ சமையல் எரிவாயு இன்றையதினம் வியாழக்கிழமை ( ஜூன் 2) 414 இடங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி நாடளாவிய ரீதியில் இன்றையதினம் 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறைகளையுடைய 50 ஆயிரம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன. கீழுள்ள லிங்கை கிளிக்...

மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு!!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயினாலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணிநேரம் மின்வெட்டு...

சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்த இந்தியப் பிரதமர் இணக்கம் – ஜனாதிபதி

நாட்டில் எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவியுடன் வழங்கப்படும் இந்த உரமானது...

100வது நாளை எட்டிய போர் ! களமிறங்கியது ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப்படை!!

ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் நடவடிக்கைகள் 100வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஷ்யாவின் இந்த...

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமனம்!!

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,மத்திய சுகாதார அமைச்சினால்...

கிளிநொச்சியில் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற மக்கள் வீதி மறியல் போராட்டம்

கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர். கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில்...

யாழ். நூலகம் எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையின் 41 ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா அவர்களுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த...

மஹிந்தவை பதவி விலகுமாறு கோரியதே எனது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு – ஜனாதிபதி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை நினைத்துதான் இவ்வாறான தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். தமது முழுமையான ஒருமித்த கருத்துடன் 21ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்...

VAT உள்ளிட்ட பல வரிகளை அதிகரிக்க தீர்மானம்!!

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெறுமதி சேர் வரியை (VAT) 8% இல் இருந்து 12% ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அடுத்ததாக, தொலைத்தொடர்பு வரியை 11.25% லிருந்து 15% ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சட்டத்...

அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடை!

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில்...

மேலும் மூன்று இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரு நாட்டு கடற்படை பாதுகாப்பையும் மீறி மேலும் மூன்று இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கை தமிழர்கள் சென்றடைய ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்திய அரசைப் பொறுத்த அளவு இலங்கையில் இருந்து வரக்கூடிய நபர்களை...

புதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்!

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது கடமைகளை இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று முற்பகல் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் ஜனாதிபதி நியமன கடிதத்தை கையளித்திருந்தார். அதற்கமைய இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக விளங்கிய விக்கும் லியனகே இராணுவ தளபதியாக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

நாட்டில் இன்றைய தினமும் (புதன்கிழமை) 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை தமது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 60 சதவீதமான விநியோகம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெறும்...

மஹிந்த குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (புதன்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக...
Loading posts...

All posts loaded

No more posts