Ad Widget

சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்த இந்தியப் பிரதமர் இணக்கம் – ஜனாதிபதி

நாட்டில் எதிர்வரும் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியுடன் வழங்கப்படும் இந்த உரமானது நாட்டிற்கு கிடைக்கப்பெறும் தினத்திலிருந்து 20 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts