Ad Widget

200 சீன இணையர்களுக்கு சிறீலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம்!

200 சீன இணையர்களுக்கு சிறீலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது என சிறீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவில் பிரமாண்டமான திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு சீனர்களும் இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே கொழும்பில் 200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் பாரிய திருமணத்தை நடத்துவதற்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய நிகழ்வுகளுக்கு பாரிய திரையரங்கும், இடவசதிகளும் தேவைப்படுகின்றன எத் தெரிவித்துள்ளார்.

ஆனால், எப்போது குறித்த இணையர்களுக்குத் திருமணம் நடைபெறப்போகின்றது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.

Related Posts