Ad Widget

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தனியார் பேருந்தை மோதியது! பெண் காயம்!

யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால் வந்த ‎உழவு இயந்திரம்‬ பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேரூந்தில் ஏற முற்பட்ட ‪‎இரு கைகளையும் இழந்த பெண்‬ணின் கால்கள் மேல்‬ உழவு இயந்திரம் ஏறியதில் ‪அவர் ஸ்தலத்திலேயே மயக்கமடைந்தார். உடனே சாரதியும் உழவு இயந்திரத்தை குறித்த இடத்தில் விட்டு விட்டு தப்பியோடினார்.

குறித்த இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts