Ad Widget

வெள்ள பாதிப்புகள் குறித்து கிளி.அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட இன்று (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கிளிநொச்சிக்கு சென்றுள்ள பிரதமர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவநேசன் சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவமோகன், ஈ.சரவனபவன், சார்ல்ஸ் நிர்மலநாதன், மாவை சேனாதிராஜா, சித்ததார்த்தன், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலக அதிகாரிகள், பாதுகாப்ப தரப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts