Ad Widget

வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்பு

24 வயது இளைஞர் ஒருவர் இரத்தக் கறையுடனும், அடிகாயங்களுடனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பகுதியைச் சேர்ந்த சின்னராசா மகிந்தன் (வயது 24 ) என்ற இளைஞரே சடலமாக நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பின் வீதிப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருமணமாகாத இளைஞர் நைலோன் கயிற்றினால் தூக்கிடப்பட்ட நிலையில், உடம்பில் 7 இடத்தில் காயங்கள் இருப்பதாகவும் சடலத்தினை பார்வையிட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சடலம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த இளைஞர் தினமும் மது அருந்துவதாகவும், சடலம் குறித்த விசாரணையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், யாழ்.நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் சடலத்தினை பார்வையிட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

Related Posts