Ad Widget

வீதியை மறித்து பொம்மைவெளி மக்கள் போராட்டம்

சொந்தக் காணி வழங்குமாறு வலியுறுத்தி பொம்மைவெளி பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொம்மைவெளி சந்தியில் இன்று காலை கூடிய நூற்றுக்கு அதிகமான பிரதேச மக்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

18 வருடங்களுக்கு மேலாக தனியார் காணி ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த காணி உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவர் வந்து எங்களை வெளியேற சொன்னால் நாங்கள் எங்கு செல்வது.

எனவே நாங்கள் குடியிருக்கும் காணியை எமக்கே வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வீதியில் கொட்டகைகளை அமைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts