Ad Widget

விபத்தில் வலிகாமம் வடக்கு தவிசாளர் படுகாயம்

தாவடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்தில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னால் சென்ற வான் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டபோது, இவரது மோட்டார் சைக்கிள் வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts